முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங். உள்ளாட்சி தேர்தல்: 21 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

புதன்கிழமை, 17 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புர்த்வான், ஜூலை. 18 - மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. இதையடுத்து 21 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் கடந்த 21 ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 11 ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலின் போது பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 15 ம் தேதி புர்த்வான் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. 

இந்த தேர்தலின் போது பல இடங்களில் குறிப்பாக புர்த்வான் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரின் கணவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன. இதை தொடர்ந்து வன்முறை பரவிய புர்த்வான் மாவட்டத்தில் மொத்தம் 21 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் இன்றைய தினம் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago