எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 26 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜை சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வின்சென்ட் ஜார்ஜ் கடந்த 1984 ம் ஆண்டு நவம்பர் முதல் 1990 டிசம்பர் வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்களை குவித்ததாக 2010 ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த ராஜீவ் காந்தியின் தனி செயலர் என்ற பதவியை வகித்த ஜார்ஜ் தனது மனைவி, குழந்தை மற்றும் நெருங்கிய உறவினர்களின் பெயரில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்களை வாங்கியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டது.
தெற்கு டெல்லி, பெங்களூர், சென்னை, கேரளம் உள்ளிட்ட இடங்களில் ஜார்ஜ் சொத்துக்களை வாங்கி குவித்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருந்தது. எனினும் சி.பி.ஐ. இந்த ஆண்டு மே மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ஜார்ஜ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி இவ்வழக்கை முடித்துக் கொள்ள அனுமதி தருமாறு கோரியிருந்தது. சி.பி.ஐ.யின் இந்த மனு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை முடித்துக் கொள்ள சி.பி.ஐ. சமர்ப்பித்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 30 ம் தேதி ஆஜராகுமாறு ஜார்ஜூக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


