முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது பெயரை கெடுக்க சேரன் சதி: தாமினியின் காதலர்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - எனது பெயரை கெடுக்க இயக்குனர் சேரன் சதிவேலை செய்கிறார் என்று தாமினி காதலர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். டைரக்டர் சேரன், நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து அளித்த புகாரில், தாமினியின் காதலன் சந்துரு மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். 3 பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது மகள் தாமினியின் 'பேஸ்புக்' விஷயங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார். 

தன்னை வைத்து படம் எடுக்க வேண்டும், அல்லது பெரிய தொகையை எனக்குத் தர வேண்டும். இல்லையென்றால் உனது குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும் சந்துரு மிரட்டியதாக சேரன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தாமினி பற்றி பேஸ்புக்கில் ஆபாசமான தகவல்களை வெளியிடுவேன் என்று சந்துரு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளார். இக்குற்றச் சாட்டுகள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று சேரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேரனின் குற்றச்சாட்டு குறித்து தாமினியின் காதலன் சந்துரு நேற்று தினபூமி செய்தியாளரிடம் அளித்த பேட்டி வருமாறு:- 

நான் சினிமாவில் டான்சராக உள்ளேன். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளேன். என்னைப் பற்றி தவறான பல தகவல்களை சேரன் கூறி இருக்கிறார். நான் குடிகாரன் என்றும், பல பெண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். என்னை பற்றி தாமினிக்கு தெரியும். 

நான் நல்லவன் இல்லை என்று அவர் கூறட்டும். எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு டைரக்டர் சேரன் சதி திட்டம் தீட்டி செயல்படுகிறார். நாங்கள் இருவருமே சேர்ந்து வாழ விரும்புகிறோம். எனவே போலீசார் இதற்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தாமல் எங்களை சேர்த்து வைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

 

சேரன் பேட்டியை பார்த்து சந்துரு குடும்பத்தினர் கடும் கோபம்

 

தனது மகளின் காதல் விவகாரம் குறித்து டைரக்டர் சேரன் தனது மனைவியுடன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். 

சேரன் கூறும் போது ''சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்'' என்றார். அமீர் கூறும் போது, ''சந்துருவின் குடும்பத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி உளவு பிரிவு போலீசார் விரிவாக விசாரித்தால் உண்மை தெரியும்'' என்றார். 

இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர்.

இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ''எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்'' என்றார். ''தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா'' என்று சந்துரு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்