எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.7 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆஜரானார். அப்போது முன் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது விதிமுறைகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தியது. அதன் வரைவு அறிக்கை பாராளுமன்ற லோக்சபை சபாநாயகர் மீராகுமாரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதைத்தவிர பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தியது.
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு கண்காணித்ததோடு மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்தது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின்படி விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச்செயலாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா சித்தார்த்தா, ஸ்வான் நிறுவன புரமோட்டர் பால்வா ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 25-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்ததது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், 3-வது மனைவி ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி, உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் இன்று மே-6-ம் தேதி) டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி ஆஜராகுவதற்கு நேற்றுமுன்தினமே கனிமொழி டெல்லி சென்றுவிட்டார். கனிமொழி டெல்லிக்கு செல்லும் முன்பு, தமிழக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி. உள்பட தி.மு.க.வை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று கனிமொழியை காப்பாற்றுவதற்கு சட்ட நிபுணர்கள்,முன்னாள் நீதிபதிகள் ஆகியோர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் டெல்லிக்கு சென்ற கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றார்.
டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.தனிக்கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவருக்கு வாதாட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் கனிமொழி ஒரு அப்பாவி என்றும் அவருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். கலைஞர் டி.வி.யின் பங்குதாரராக மட்டுமே கனிமொழி இருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளாக அவர் இருப்பதால்தான் கனிமொழி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் ராம்ஜெத்மலானி மேலும் கூறினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக கனிமொழி சென்றபோது அவருடன் தி.மு.க. வை சேர்ந்த 5 எம்.பி.க்கள் சென்றனர்.
சி.பி.ஐ.தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச்சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மேலும் கலைஞர் டி.வி. செயல்பாட்டில் ஒரு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீதம் பங்கும், அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்கும் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்கும் உள்ளது. 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி சென்றிருக்கிறது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது டி.பி.ரியாலிட்டி கம்பெனியில் இருந்து குசேகான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், டிபி கம்பெனி, சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் மூலம் இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு போய் சேர்ந்துள்ளது. ஸ்வான் தகவல்தொடர்பு பிரைவேட் லிமிடெட்டுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை செய்ததற்காக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2ஜிஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதனால்தான் நேற்று சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானபோது முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கலும் செய்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது கனிமொழி, சரத்குமார் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி, இந்த வழக்கில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த ஊழலுக்கு முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குத்தான் உண்டு என்றும் ராம்ஜேத்மலானி வாதிட்டார். ஆ.ராசாவும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஷைனி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு(இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவே இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் இதே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
வார ராசிபலன்
10 Jan 2026


