எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.7 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆஜரானார். அப்போது முன் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது விதிமுறைகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தியது. அதன் வரைவு அறிக்கை பாராளுமன்ற லோக்சபை சபாநாயகர் மீராகுமாரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதைத்தவிர பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தியது.
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு கண்காணித்ததோடு மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்தது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின்படி விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச்செயலாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா சித்தார்த்தா, ஸ்வான் நிறுவன புரமோட்டர் பால்வா ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 25-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்ததது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், 3-வது மனைவி ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி, உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் இன்று மே-6-ம் தேதி) டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி ஆஜராகுவதற்கு நேற்றுமுன்தினமே கனிமொழி டெல்லி சென்றுவிட்டார். கனிமொழி டெல்லிக்கு செல்லும் முன்பு, தமிழக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி. உள்பட தி.மு.க.வை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று கனிமொழியை காப்பாற்றுவதற்கு சட்ட நிபுணர்கள்,முன்னாள் நீதிபதிகள் ஆகியோர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் டெல்லிக்கு சென்ற கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றார்.
டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.தனிக்கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவருக்கு வாதாட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் கனிமொழி ஒரு அப்பாவி என்றும் அவருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். கலைஞர் டி.வி.யின் பங்குதாரராக மட்டுமே கனிமொழி இருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளாக அவர் இருப்பதால்தான் கனிமொழி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் ராம்ஜெத்மலானி மேலும் கூறினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக கனிமொழி சென்றபோது அவருடன் தி.மு.க. வை சேர்ந்த 5 எம்.பி.க்கள் சென்றனர்.
சி.பி.ஐ.தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச்சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மேலும் கலைஞர் டி.வி. செயல்பாட்டில் ஒரு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீதம் பங்கும், அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்கும் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்கும் உள்ளது. 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி சென்றிருக்கிறது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது டி.பி.ரியாலிட்டி கம்பெனியில் இருந்து குசேகான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், டிபி கம்பெனி, சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் மூலம் இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு போய் சேர்ந்துள்ளது. ஸ்வான் தகவல்தொடர்பு பிரைவேட் லிமிடெட்டுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை செய்ததற்காக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2ஜிஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதனால்தான் நேற்று சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானபோது முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கலும் செய்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது கனிமொழி, சரத்குமார் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி, இந்த வழக்கில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த ஊழலுக்கு முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குத்தான் உண்டு என்றும் ராம்ஜேத்மலானி வாதிட்டார். ஆ.ராசாவும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஷைனி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு(இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவே இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் இதே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.