முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை கற்பழிப்பு வழக்கை விசேஷ கோர்ட் விசாரிக்கும்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

மும்பை, ஆக.30 - மும்பை பெண் பத்திரிகையாளர் கற்பழிப்புவழக்கை விசேஷ கோர்ட் விசாரிக்கும் என்று மராட்டிய மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் அறிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக மாநில அரசு விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மும்பையில் பெண் பத்திரிகையாளர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து விசேஷ கோர்ட்டை அரசு அமைத்துள்ளது. இந்த கோர்ட் பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு வழக்கை விசாரிக்கும் என்று முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவாண் தெரிவித்தார்.

இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக  விரைவு கோர்ட்டில் ஆஜராவதற்காக உஜவால் நிகாம் என்பவரை விசேஷ வழக்கறிஞராக  அரசு நியமித்துள்ளது. இவர் அரசு சார்பில் வாதாடி எதிரிகளுக்கு கடும் தண்டனையை வாங்கிக் கொடுப்பார். பொதுவாக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதும், விசாரணை தாமதாதமாக நடப்பதும் சகஜம். ஆனால் இந்த பெண் பத்திரிகையாளர் கற்பழிப்பு வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. எனவே தாமதத்துக்கு இனி இடமில்லை. இதுபற்றி முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் கூறியதாவது:

சில நேரங்களில் வழக்குகளை விசாரிக்கும்போது தாமதம் ஏற்படுவது சகஜம். ஆனால் விரைவாக நீதித்துறை செயல்பட்டு இந்த வழக்கில் விரைந்து நீதி வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்த விரைவு கோர்ட் விரைந்து செயல்பட்டு, வழக்கை சீக்கிரம் முடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு எதிர் பார்க்கிறது. 

இந்த வழக்கு தொடர்பாக அரசு சிறப்பு வழக்கறிஞர் நிகாமுடன் பேசியுள்ளேன். அவர் கூறுவது போல் செயல்பட்டு போலீஸார் குற்றப்பத்திரிகை தயார் செய்து விரைவில் தண்டனை வழங்கப்படும் என்றார். இந்த வழக்கை சிறப்பு கோர்ட் விரைந்து விசாரித்து எதிரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் அல்லது வேறு ஒரு கோர்ட் அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டிடம் முதல்வர் வலியுறுத்தி கேட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 மும்பையில் ஒரு பாழடைந்த மில்லில் போட்டோ எடுப்பதற்காக தனது ஆண் நண்பர் ஒருவரின் துணையோடு பெண் பக்கிரிகையாளர் ஒருவர் சென்றார். அப்போது அவர்களுக்கு உதவுவது போல் நடித்த சில விஷக் கிரிமிகள், ஆண் நண்பரை கட்டிப் போட்டுவிட்டு பெண் பத்திரிகையாளரை கற்பழித்தனர். இதில் தொடர்புடையவர்கள் 5 பேரையும் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்