முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ்ஜோத் சிங் சித்து விரைவில் நாடு திரும்புவார்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

அமிர்தசரஸ், ஆக.30 - அமிர்தசரஸ் தொகுதி எம்.பி. நவ்ஜோத்சிங் சித்து இன்னும் 15 நாள்களில் தாயகம் திரும்புவார் என்று சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தெரிவித்தார். சித்து கடந்த சில மாதங்களாக அமிர்தசரஸில் இல்லை. அவர் காணாமல் போய்விட்டார் என்று கூறப்பட்டது.  அமிர்தசரஸ் தொகுதி எம்.பி. நவ்ஜோத்சிங் சித்து என்பவரைக் காணவில்லை. அவரை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அரசு ஊழியர் ஒருவர் அச்சடித்த போஸ்டரை அமிர்தசரஸ் நகர் முழுவகும் ஒட்டியிருந்தார். இதையடுத்து அவரைப் பற்றிய பேச்சு நகர் முழுவதும் எழுந்தது. இதையடுத்து இன்னும் 15 நாளில் அமிர்தசரஸ் தொகுதிக்கு  சித்து  வருவார் என்று அவரது மனைவி தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 

உங்களுடைய தொகுதியை வாரத்துக்கு ஒரு நாளாவது போய் பார்வையிட்டு குறைகளை சரி செய்யுங்கள். திட்டங்கள் என்ன ஆயிற்று என்று கேளுங்கள் என்று அவரிடம் நான் ஏற்கெனவே பல முறை கூறினேன் என்றார். நீங்கள் கூறும் 15 நாள் கணக்கு எப்போது வரும் என்று கேட்டதற்கு அடுத்த 15 நாள் என்று அவர் கூறினார்.  சித்து ஏன் வெளிநாடு சென்றார் என்பதையாவது மக்கள் உணரவேண்டும். அவர் என்ன திட்டத்தை மேற்கொண்டுள்ளார் என்பதை, மத்திய, மாநில அரசுகளுக்கு  அவர் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

காணாமல் போன எம்.பி. என்று முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளது பற்றி அவரிடம் கேட்டபோது, அந்த நபர் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் பற்றி அவர் போஸ்டர் அடித்து ஒட்டவேண்டும். அமிர்தசரஸ் நகர் பற்றியும், விசா வழங்குவது தொடர்பான திட்டங்கள் பற்றியும் அறியவே அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்று சித்துவின் மனைவி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்