எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.12 - இந்தியாவில் படுகொடூர செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பியோடி உலாவரும் தாவூத் இப்ராகீம் உள்பட 50 கொடூர தீவிரவாதிகளின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பாகிஸ்தானை கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இருநாடுகளிடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடன் நேரடியாக மோத முடியாத பாகிஸ்தான், சீனாவின் ஆலோசனைப்படி தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சியும் நிதியுதவியும் செய்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி நாசவேலையில் ஈடுபட செய்கிறது. பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்தது, மும்பையில் பலமுறை குண்டுவெடித்தது, கோவை,பெங்களூர்,புனே,தலைநகர் டெல்லி ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு இதில் நூற்றுகணக்கானோர் பலியானது அனைத்துக்கும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் தீவிரவாதிகள்தான். மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகீம் உள்பட 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
மேலும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு அடுத்த கொடூர தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஜ் சயீத், மிகவும் கொடூர தீவிரவாதியான ஜாகி ரகுமான் லஹ்வி ஆகியோரும் இந்த 50 தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மும்பை மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஹபீஜ் சயீத்துக்கு தொடர்பு இருக்கிறது. இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமத் தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக விளங்கும் மெளலானா மசூத் அசாரும் இடம் பெற்றுள்ளான். கடந்த 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்த குற்றவாளிகள் பட்டியலில் இவன் முதல் இடத்தை பெற்றுள்ளான். கடந்த 1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திக்கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்திற்கு தீவிரவாதிகள் கொண்டு சென்றனர். அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை விடுவிடுப்பதற்காக அசார் விடுவிக்கப்பட்டான். பின்னர் அவன் மீண்டும் பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இவர்களை சேர்த்து மொத்தம் 50 கொடூர தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு சென்று சுதந்திரமாக உலாவருகிறார்கள். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது. இதற்கெல்லாம் பாகிஸ்தான் செவிசாய்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026


