எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,மே.12 - தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 13 ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு 78 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் 13 ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்துக்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே வெளி மாநிலங்களை சேர்ந்த மத்திய போலீஸ் படையினரும், மையத்தின் வளாகங்களில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் வெளிப்புறப் பகுதிகளில் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வெளி மாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500 மத்திய போலீஸ் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஒரு மையத்தில் ஆறு முதல் 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளின் அனைத்து ஜன்னல்களும் சிமிண்ட் கலவையால் பூசப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளன. அதுவும் இரண்டு பூட்டுகளால் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அடிக்கடி சென்று பார்வையிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு யார் யார் வருகிறார்கள் என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணும் போது ஒவ்வொரு தொகுதியில் பதிவான வாக்குகளும் தனித்தனியே எண்ணப்படவுள்ளன. குறைந்தது 14 மேஜைகளை கொண்டு வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகளை எண்ணி முடித்த பிறகு பார்வையாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இதன் பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரே நேரத்தில் வாக்குகள் எண்ணப்படும். அதாவது ஒரு மேஜையின் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும் அருகில் உள்ள மேஜையில் அந்த சுற்றின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே அனைத்து மேஜைகளிலும் அடுத்த சுற்றுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் தரப்படும்.
ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகளை எண்ணும் நிகழ்வு வீடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டு பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதை வேட்பாளர்களின் முகவர்கள் பார்த்து குறித்து கொள்ளலாம். இதனால் குழப்பங்கள் தவிர்க்கப்படும். நாளை வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அரை மணி நேரத்திற்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். நண்பகல் 12 மணிக்கு பிறகே முழுமையான அளவில் முடிவுகள் தெரியும். கடந்த தேர்தல்களில் காலை 11 மணிக்குள் முடிவுகள் தெரிந்தன. ஆனால் இந்த முறை பார்வையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் முழுமையான அளவில் முடிவுகள் வெளியாக சிறிது காலதாமதம் ஏற்படக் கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.