எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மே.12 - தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 13 ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு 78 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் 13 ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்துக்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே வெளி மாநிலங்களை சேர்ந்த மத்திய போலீஸ் படையினரும், மையத்தின் வளாகங்களில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் வெளிப்புறப் பகுதிகளில் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வெளி மாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500 மத்திய போலீஸ் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஒரு மையத்தில் ஆறு முதல் 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளின் அனைத்து ஜன்னல்களும் சிமிண்ட் கலவையால் பூசப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளன. அதுவும் இரண்டு பூட்டுகளால் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அடிக்கடி சென்று பார்வையிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு யார் யார் வருகிறார்கள் என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணும் போது ஒவ்வொரு தொகுதியில் பதிவான வாக்குகளும் தனித்தனியே எண்ணப்படவுள்ளன. குறைந்தது 14 மேஜைகளை கொண்டு வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகளை எண்ணி முடித்த பிறகு பார்வையாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும். இதன் பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரே நேரத்தில் வாக்குகள் எண்ணப்படும். அதாவது ஒரு மேஜையின் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும் அருகில் உள்ள மேஜையில் அந்த சுற்றின் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகே அனைத்து மேஜைகளிலும் அடுத்த சுற்றுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் தரப்படும்.
ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகளை எண்ணும் நிகழ்வு வீடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டு பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதை வேட்பாளர்களின் முகவர்கள் பார்த்து குறித்து கொள்ளலாம். இதனால் குழப்பங்கள் தவிர்க்கப்படும். நாளை வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அரை மணி நேரத்திற்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். நண்பகல் 12 மணிக்கு பிறகே முழுமையான அளவில் முடிவுகள் தெரியும். கடந்த தேர்தல்களில் காலை 11 மணிக்குள் முடிவுகள் தெரிந்தன. ஆனால் இந்த முறை பார்வையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால் முழுமையான அளவில் முடிவுகள் வெளியாக சிறிது காலதாமதம் ஏற்படக் கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையையையொட்டி 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்ம
-
சர்வாதிகாரிகளை கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூசகம்..?
04 Jan 2026கீவ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2026
04 Jan 2026 -
ஜனநாயகன் படத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கையா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்
04 Jan 2026கோபி, ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்.
-
மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா திடீரென அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
04 Jan 2026சென்னை, தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
-
கேரளா: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி
04 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்தில் ஒருவர் பலியானார்.
-
தமிழ்நாட்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்
04 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா தாக்குதல்: வெனிசுலாவில் 40 பேர் உயிரிழப்பு
04 Jan 2026காரகாஸ், வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
04 Jan 2026திருச்சி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவில் ஒருவர் உயிரிழப்பு
04 Jan 2026கீவ், ரஷ்யாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட்டில் சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
-
வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க சிறையில் அடைப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப
-
விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
04 Jan 2026ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
04 Jan 2026சென்னை, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் என்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
-
வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிப்பு: அதிபர் ட்ரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி தொடக்கம்
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
04 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்
04 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜன.
-
வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்
04 Jan 2026கராகஸ், வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு
04 Jan 2026தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் 4 காவலர்கள் பலி
04 Jan 2026லாகூர், பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
ஏ.வி.எம். நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமா பற்றி பேசவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
04 Jan 2026சென்னை, ஏ.வி.எம். சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.வி.எம்.
-
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதற்காகன மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
-
கலைஞரின் மரியாதையை பெற்றவர்: ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினி பேச்சு
04 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞரின் மரியாதையை பெற்றவர் என்று ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
வெனிசுலா மீதான தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டம்: மத்திய அமைச்சர் பெருமிதம்
04 Jan 2026புதுடெல்லி, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.


