முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பாறைகள் உருண்டு விழுந்து 5 பேர் பலி

புதன்கிழமை, 2 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

கொலராடோ, அக்.3  - அமெரிக்காவில் சுற்றலா சென்ற இடத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததில்  5 பேர் பலியானார்கள். இவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒரு சிறுமி மட்டும் உயிர் பிழைத்தாள். 

அமெரிக்காவில் மிசோரி மாகாணத்தை சேர்ந்தவர் டானி ஜான்சன். இவர் எலக்ட்ரீயசியனாகவும், பள்ளியில் நீச்சல் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி டாவ்னா. மகள்கள் கிரேசி, குளோவா, உறவினர்கள் இருவர் ஆகியோர் கொலராடோ மாகாணத்தில் உள்ள புவனே விஸ்டா மலைப்குதிக்கு வந்தனர். அங்கு திடீரென மரங்கள் விழுவதைக் கண்ட ஜான்சன்  அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு கூறினார். 

பின்னர் தனது மகள் கிரேசியை மேடான இடத்துக்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு மற்றவர்களைக் காப்பாற்ற  ஓடிவந்தார். அதற்குள் ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்ததில் அனைவரும் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் கிரேசி மட்டும் உயிர் பிழைத்தாள். புதைந்தவர்களது சடலங்களை மீட்கும்பணி நடைபெற்று வருவதாக நகர மேயர் ஜான்ஸ்பீல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்