முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி..யில் காங்., க்கு ஆதரவாக டெண்டுல்கர் பிரசாரம்?

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், அக்.23 - மத்தியபிரதேசத்தில் சட்ட சபைக்கு நடைபெறும் தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரை பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பொறுப்பு மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலில் பாஜக ஆதரவு அலை வீசுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இல்லை என்று கூறப்படுகிறது.  எனவே அதிக இடங்களில் வெற்றிபெற காங்கிரஸ் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு 3_வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது.  

காங்கிரஸ்_பாஜக போட்டி தீவிரமாக உள்ளது. இரு தரப்பும் தங்களது வெற்றியை உறுதி செய்ய பல வழிகளிம் முயற்சித்து வருகின்றன.  இரு தரப்பும் மிக பிரபலமானவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்உ வருகின்றனர். அந்த  வகையில் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரை பிரசாரத்துக்கு அழைத்து வாக்கு சேகரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  அதன்படி டெண்டுல்கரை அழைத்து வரும் பொறுப்பு மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் டெண்டுல்கரிடம் பேசி வருகிறார்.

டெண்டுல்கர் 200_வது டெஸ்டில் விளையாடப் போகிறார். அதன்பிறகு அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.  எனவே அவரை பிரசாரத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் இருக்காது என்று கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்வது பற்றி டெண்டுல்கர் இதுவரை எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினரிடம் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்