எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.- 18 - நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் பணநாயகத்தை மக்களின் ஜனநாயகம் வென்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 தொகுதிகளில் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழகத்தில் நடைபெற்ற 14 வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதற்கு முன்பு வரை நேர்மையாகவும், ஜனநாயகமாகவும் நடைபெற்று வந்த தமிழகத்தின் பொது மற்றும் இடைத் தேர்தல்களில் முதல் முறையாக திருமங்கலம் இடைத் தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் விளையாடியது. அந்த தேர்தல் பணநாயக தேர்தலாகவும் மாறியது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, திருமங்கலம் இடைத் தேர்தலுக்கு பொறுப்பேற்று தேர்தல் அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டும், ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வீடு வீடாக விநியோகித்தனர். அப்போது தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால் அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் தி.மு.க.வினர் மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிலர், பணத்தை பெற்றுக் கொண்டோம் என்பதால் தி.மு.க.வுக்கு பயந்து கொண்டே ஓட்டு போட்டனர். திருமங்கலம் தொகுதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகத்தை தோற்கடித்து பணநாயகத்தை வெற்றி பெற செய்தது. அங்கு தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தி.மு.க.வினர் கோடி கோடியாக பணத்தை செலவு செய்தனர். அங்கு தி.மு.க வெற்றி பெற்ற பின்னர் திருமங்கலம் பார்முலா என்ற புதிய வார்த்தை உருவானது. திருமங்கலத்தை தொடர்ந்து மதுரை மேற்கு, மத்தி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு இடைத் தேர்தல்களிலும் திருமங்கலம் பார்முலாவையே தி.மு.கவினர் பின்பற்றினர். அங்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து தி.மு.கவை வெற்றி பெறச் செய்தனர். இனி எந்த தேர்தல் நடந்தாலும் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க புதுக் கணக்கு போட்டது.
இந்நிலையில் தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு பெறும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத் தேர்தலிலும் திருமங்கலம் பார்முலாவை கடைப்பிடித்து மீண்டும் தி.மு.கவை ஆட்சிக்கு கொண்டு வர தி.மு.க. தலைமையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கணக்குப் போட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தலை சந்திக்க தயாராகினர். இவர்களின் திருமங்கலம் பார்முலாவை கண்டு எதிர்க்கட்சிகளும் கலக்கத்தில் இருந்தன. அப்படியிருந்தும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் மிகுந்த தைரியத்துடன் கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கினார். அவர்களின் திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கவும் கூட்டணி கட்சியினருடன் ஜெயலலிதா செயல் திட்டம் வகுத்தார்.
நிலைமை இப்படி இருக்க தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீண்குமார் நியமிக்கப்பட்டார். அவரது நியாயமான நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதில் இடையூறு ஏற்பட்டது. பறக்கும் படை, வீடியோ குழுக்கள் என பல குழுக்கள் அமைத்து தி.மு.க வினர் கடத்திய பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்து போன தி.மு.க.வினர் பின்னர் சுதாரித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு பொறுப்பாளர்கள் மூலம் ஓட்டுக்கு ரூ. 200 ஐ இரவில் மின்தடை ஏற்படுத்தி வழங்கினர். தொகுதிக்கு ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்தனர்.
இதையறிந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சியினர், நாம் தமிழர் இயக்க நிறுவனர் இயக்குனர் சீமான் ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களில், தி.மு.கவினர் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா உங்களுக்கு தருகின்றனர். உங்களிடம் இருந்து கொள்ளையிட்ட, உங்களது உழைப்பை சுரண்டிய பணத்தை தானே தருகின்றனர். உங்களது பணத்தை உங்களுக்கு தரும் போது அதை நீங்கள் மறுக்காமல் வாங்கி கொள்ளுங்கள். ஓட்டுக்களை மட்டும் அவர்களுக்கு போட்டு விடாதீர்கள். அப்படி காசுக்காக தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போட்டால் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள முடியாது என பிரச்சார மேடைகளில் பேசினர். இவர்களின் இந்த பிரச்சாரமும், தி.மு.க ஆட்சியில் பட்ட துன்பங்களையும் மக்கள் சிந்திக்க தொடங்கினர். பணத்தை பெற்றுக் கொண்ட தி.மு.கவிற்கு ஓட்டளித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் நிலை என்ன ஆகும் என மக்கள் யோசித்து தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்து தி.மு.கவினர் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.கவுக்கு எதிராகவும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகவும் ஓட்டளிக்க ஏக மனதாக முடிவு செய்தனர். தேர்தலின் போது பணம் கிடைக்கப் பெறாதவர்கள் தி.மு.கவினர் வீடுகளுக்கு சென்று எங்கள் வீட்டில் உள்ள ஓட்டுக்களுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லையே. எப்போது கொடுப்பீர்கள் என கேட்டு, பணத்தை பெற்றனர். இது தவிர இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். ஆனால் தற்போது ரூ. 200 மட்டுமே தருகின்றனரே என தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபமடைந்தனர். தற்போது ரூ. 200 கொடுத்து விட்டு ஜெயித்து ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு கோடி கோடியாக கொள்ளையடிக்க நினைக்கும் தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபம் கொண்டனர். பணத்திற்கு தங்களை தி.மு.க அடிமையாக்கப் போகிறார்கள், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏழை, நடுத்தர மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவர் என்பதை நன்கு உணர்ந்த தமிழக மக்கள் பணநாயகத்தை முறியடிக்க தீர்க்கமாக முடிவு செய்தனர். அவர்களது கோபங்களை வெளிப்படுத்த தேர்தல் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏப்ரல் 13 ல் அவர்கள் தங்களது கோபங்களை தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்குகளாக பதிவு செய்தனர். முடிவுகள் தி.மு.க வுக்கு மிக மோசமான தோல்வியை ஏற்படுத்தியது. இதன் மூலம் பணநாயகத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்ற தி.மு.கவினரின் எண்ணமும், தப்புக்கணக்கும் தோற்றுப் போயுள்ளது. ஜனநாயகத்தை நம்பிய அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று 3 வது முறையாக ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக ஆகியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.