முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் விமானப் படை தாக்குதல் 135 பேர் சாவு

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ரூட், டிச.20 - சிரியாவில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற விமானப் படைத்தாக்குதலின் 135 பேர் உயிழந்தனர். சிரியாவில் உள்ள முக்கிய வர்த்தக நகரமான அலெப்போ தற்போது கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 135 பேர் பலியானார்கள். இதில் 40 பேர் குழந்தைகள் ஆவர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். பதிலுக்கு கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அதிபர் பஷார் அல் - அஸாத் வசம் உள்ள பகுதியில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி தெரியவில்லை. கடந்த 2011 -ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 1,26,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்