முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் கனிமொழிக்கு போர்வையே தலையணை

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 23 - டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி தனக்கு வழங்கப்பட்டுள்ள போர்வையை மடித்து தலையணையாய் பயன்படுத்தினார்.
சிறை சென்ற முதல் நாளான வெள்ளிக்கிழமையன்று இரவு 11 மணிக்கெல்லாம் உறங்கினார். காலையில் 5.30 மணிக்கு அவர் எழுந்தார். காலை உணவாக பிரட், டீ அவருக்கு வழங்கப்பட்டது. காலையில் செய்தித் தாள்களை அவர் வாசித்தார். சிறையில் இருந்த மற்ற தமிழ் கைதிகளுடன் அவர் உரையாடினார். இவ்வாறாக அவரது முதல் நாள் சிறை வாழ்க்கை தொடங்கியது.
சிறிய அறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு கட்டில், மின் விசிறி வசதி வழங்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜராக வந்த அவர் முந்தைய நாள் அணிந்திருந்த அதே ஆரஞ்சு நிற சல்வார் சூட்டில் வந்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்