எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், ஜன, 30 - ஐநா மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் மாதத்தில் இலங்கை சம்பந்தமாக மறுபடியும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
பல்வேறு பிரச்சினைகள், தீர்வு காணப்படாமல் எந்தவித முன்னேற்றமும் இன்றி இருப்பதற்கு இலங்கையை பொறுப்பேற்க வைப்பதிலும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அக்கறை இருப்பதால்தான் மீண்டும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலங்கள் பறிக்கப்படுவது, மத உள்நோக்கத்துடன் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் விஷயத்தில் அமெரிக்காவுக்கு வேதனைதான் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2009ல் நடந்த போரின்போது நடந்த குண்டுவீச்சில் இறந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் புதைக்கப்பட்ட இடம் என தெரி வித்து அமெரிக்க பிரதிநிதி பார்வையிடும் படம் ஒன்றை அண்மையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டது கொழும்பின் ஆத்திரத்தை உசுப்பி விட்டது.
இந்நிலையில், போரின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற அச்சுறுத்தல் வாள் போல் இலங்கையின் மீது தொங்கிக்கொண்டே இருக்கி றது. நல்லிணக்க குழுவின் பரிந்துரை களை அமல்படுத்த இலங்கைக்கு இன்னும் 18 மாதங்களே இருக் கிறது. இந்த நடவடிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் மீண்டும் மோதல் மூளக்கூடிய அச்சுறுத்தல் இருக்கிறது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்காவின் நடைமுறைகளை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். நாங்களே சொந்தமாக அதற்கு வழி வைத்திருக்கிறோம். போர்க்குற்றம், மனித உரிமை மீறல் புகார் விவகாரங்களில் முன்னேற்றம் காணாமல் இலங்கை நிதானமாக செயல்படுவதால் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்து விட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுவது நியாய மாகாது. புகார் விஷயத்தில் நட வடிக்கை எடுப்பதில் முடிந்த வகையில் அக்கறை காட்டுகிறோம்.
போருக்கு பிறகு இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வடக்கு மாகாணத் தில் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அரசியல் அதிகார பகிர்வு நடவடிக்கையின் ஆரம்பம் இது என்றார் வீரதுங்க.ஆனால், பெரும்பான்மை சிங்களர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாக தமிழர்கள் புகார் கூறுகின்றனர். இலங்கை ராணு வத்தின் அத்துமீறல் புகார்கள் பற்றி விசாரிக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டதாகவும், மருந்து, உணவுப்பொருள்கள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்காமல் தட்டிக் கழிக்கிறது இலங்கை என்றும். இதை இலங்கை சரி செய்யா விட்டால் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டிவரும் என்றும் வாஷிங்ட னில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் ஜான் சிப்டன் எச்சரித்தார்.
உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றாகவேண்டும் என்பதற்காக இனப்படுகொலையை மத்திய அரசு நிகழ்த்தியதை நிரூபிப்போம் என்று வடக்கு மாகாண அரசு தெரிவித்துள்ளது.
போரின்போது இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச சமுதாயத்தின் மேற்பார் வையில் கணக்கெடுப்பு நடத்துவது என வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றையும் வடக்கு மாகாண அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசும் போரில் உயிரிழந்தோர், காணாமல் போனவர் கள்பற்றி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. போரின் போது இலங்கை ராணுவம் நடத்தியதாக்குதலில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டதாக ஐநாவின் முந்தைய அறிக்கை தெரிவித்தது. ஆனால் இத்தகைய புகார்களை இலங்கை மறுத்து வருகிறது.
போர்க்குற்றம் தொடர்பாக மார்ச்சுக்குள் நடவடிக்கை எடுத்து முன்னேற்றம் கண்டு, தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்த தவறினால் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக ஐநா ஆதரவிலான விசாரணைக்கு பிரிட்டன் வலியுறுத்தும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த நவம்பர் மாதம் எச்சரித்தார்.
போரின்போது இலங்கை ராணுவம், புலிகள் தரப்பில் இழைக்கப் பட்ட போர்க்குற்றங்கள் பற்றி இலங்கையே விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளில் 2 தீர்மானங்களை ஐநா கவுன்சில் நிறைவேற்றியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
08 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம்
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.