முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டிய தருணம்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, பிப். 21 - தற்காப்பாக விளையாடி வரும் தோனியை இந்திய கிரிக்கெட்அணியின்கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முன்னாள் கேப்டன்

மொகிந்தர் அமர்நாத் தெரிவித்து இருக்கிறார். 

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுக

ளில் பங்கேற்கும் டெஸ்ட்  போட்டிகளில்

தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருகிறது. 

2011 ல் இங்கிலாந்து பயணத்தில் 0 _4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 0_4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கோட்டை விட்டது. 

சமீபத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றது. டெஸ்ட் தொடரில் 0_1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இப்போது நியூசிலாந்திடம் _0 _ 1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இப்போட்டிகள் அநைத்திலும் தோனி கேப்டனாக இருந்துள்ளார். 

வெளிநாட்டு போட்டிகளில் இந்திய அணி 23 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. இதில்5 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

11 போட்டிகளில் இந்திய அணி தோல்விஅடைந்துள்ளது. 7போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் கேப்டன் மொகிந்தர் அமர்நாத் கூறியதாவது _ 

தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றும் தற்காப்பு முயற்சியில்தோனி அணியை வழிநடத்துகிறார். இதனால்தான் இந்திய அணியால் வெளிநாட்டுப் போட்டிகளில் வெற்றி  பெற முடியாமல் போகிறது. 

உள்நாட்டில் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் தான் தோனி கேப்டன் பொறுப்பில் சாதனைகள் படைத்து உள்ளார். அன்னிய மண்ணில் அவரது தலைமை குறிப்பிடும் படியாக இல்லை. 

இந்திய அணிக்கு தற்போது மன்சூர் அலிகான் பட்டோடி போன்ற உத்வேகமான கேப்டன் தான் தேவை. எனவே தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தான் நினைக்கிறேன். 

கேப்டனாக இருப்பவர் முன் வரிசையில் களம் இறங்கி அணிக்கு தலைமை வகிக்க வேண்டும். எந்த கிரிக்கெட் அணியிலும் பேட்ஸ்மேனாக இருப்பவர் 7 _வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவது இல்லை. 

இதில் எந்த வகையான முன்னுதாரணத்தை உருவாக்க தோனி முயற்சிக்கிறார் என்று புரியவில்லை. 

இந்திய  டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு பொறுத்தமானவர் விராட் கோக்லி தான். கௌதம் காம்பீர் கேப்டன் பதவிக்கான அனுபவம் உடையவர் தான். 

எனினும் இப்போதைய சூழ்நிலையில் அவர் அணியிலேயே இல்லை. எனவே கோக்லி மட்டும் தான் ஒரே தகுதியான நபர். தனது தலைமைப் பண்பை அவர் பல்வேறு சூழ்நிலைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். 

ஒரு நாள் போட்டியில் தோனி தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே உள்ளது. எனவே அதில் கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. 

இந்திய அணியைப் பொறுத்தவரை டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி _20 ஆகிய ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்