முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிபங்களாவில் சவுதி அரேபிய இளவரசிகள் சிறை வைப்பு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெட்டா, மார்ச்.12 - சவுதி அரேபியாவின் மன்னர் ஆக இருப்பவர் அப்துல்லா. இவரது மகள்கள் சாஹர், ஜவாகர், ஹாலா, மாகா. இளவரசிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர்.

இவர்களில் சாஹர், ஜவாகர் ஆகியோர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கைக்கு இ-மெயில் மற்றும் டெலிபோனில் பேசினர். அப்போது தாங்கள் இருவரும் ஜெட்டாவில் தனி சொகுசு பங்களாவிளில் அடைந்து சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதே பொன்று தனது தங்கைகள் ஹாலா, மாகா ஆகியோரும் இது போன்று அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினர். சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என கடுமையான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்கள் கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இளவரசிகளின் தாயார் அலானவுடு அல்பயஷ் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது மகள்களின் வருப்பத்துக்கு எதிராக ஜெட்டாவில் தனி பங்களாக்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். வெளி உலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். எனவே அவர்களை மீட்க வேண்டும் என வலியுருத்தியுள்ளார்.

அவரை மன்னர் அப்துல்லா விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்