முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய பாட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து ஜோடி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிம்சேன், ஏப்.28 - ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதன் மூலம் வெண்கலப்பதக்கத்துடன் இவர்கள் ஆறுதல் அடைய வேண்டியதாயிற்று. 

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள பி.வி. சிந்து, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் சிக்சியாங் வானை எதிர்கொண்டார். இதில் முதல் கேமை 21-15 என்ற கணக்கில் வென்று சிந்து முன்னேற்றம் கண்டார். இதனால் 2-வது கேமில் விறுவிறுப்பு கூடியது. இருவரும் சளைக்காமல் போராடினர். இறுதியில் 22-20 என்ற கணக்கில் வான் இந்த கேமை வென்றார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற 3-வது கேமில் வாங் மெதுவாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இறுதியில் 21-15 என்ற கணக்கில் 3-வது கேமை வாங் கைப்பற்றி, போட்டியில் வென்றார். 

சுமார் 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை இந்த போட்டி நீடித்தது. கடுமையாக போராடியபோதிலும் சிந்துவால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அரையுறுதி வரை முன்னேறியதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி சீனாவின் லுயோ ஜிங், லுயோ யு ஜோடியை அரையிறுதியில் எதிர் கொண்டது. சுமார் 33 நிமிடங்களே நீடித்த இந்த ஆட்டத்தில் 21-12, 21-7 என்ற கணக்கில் மிகவும் எளிதாக சீன ஜோடி வென்றது. 

தரவரிசையில் 10 வது இடத்தில் உள்ள சீன ஜோடி, இப்போது 3-வது முறையாக இந்திய ஜோடியை தோற்கடித்துள்ளது. எனினும் அரையிறுதி வரை முன்னேறிய ஜூவாலா – அஸ்வினிக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்