முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கோவில் கால்பந்து மைதானத்தில் நெரிசலில் 15பேர் பலி

திங்கட்கிழமை, 12 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

கின்ஷசா, மே.13 - ஆப்பிரிக்கா நாடன காங்கோ தலைநகர் கின்ஷசாவில் கால்பந்து போட்டி நடந்தது.  அதில், கின்ஷசா அணியும், லுபும் பாஷி நகர அணியும் மோதின.

முடிவில் லுபும்பாஷி அணி கின்ஷசா அணியை 1-0 கோல் கணக்கில் வென்றது. இதனால் கின்ஷசா அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து ரகளையில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். அப்போது 4 போலீசார் தாக்கப்பட்டு காயம் அடைந்தனர். எனவே, கலவரக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தனர்.

இதனால் கால்பந்து போட்டியை காண வந்திருந்த பொதுமக்கள் மைதானத்துக்கு வெளியே ஓடினர். ஆனால் வாசல் குறுகியதாக  இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதில் சிக்கி 15 பேர் அதே இடத்தில் பரிதாமாக உயிரிழந்தனர். 24 பேர் காயம் அடைந்து. அங்கு அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காங்காககோவிலில் கடந்த மாதம் இசை திருவிழா நடந்தது. அப்போது ஏற்பட்ட மின்தடை காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 21 பேர் பலியாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்