எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.14 - கனிமொழி ஜாமீன் மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். சி.பி.ஐ. க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி எங்கே என்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ரூ.1.76 கோடி லட்சம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி.யும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும் சரத்குமாரும் முதலில் டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை விசாரித்த சி.பி.ஐ.கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி,கடந்த மே மாதம் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனையொட்டி டெல்லி ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது பலமுறை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் கொடுக்க டெல்லி ஐகோர்ட்டும் கடந்த 8-ம் தேதி மறுத்துவிட்டது. கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கனிமொழிக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை மாற்றி சொல்ல வைக்க முடியும் என்பதோடு ஆதாரங்களையும் அழிக்க வாய்ப்பு உள்ளது அதனால் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி ஐகோர்ட் அறிவித்தது. இதையும் எதிர்த்து கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி நேற்று சுப்ரீம்கோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். செளகான், ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதோடு மட்டுமல்லாது சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியதாக கூறப்படுவதின் தற்போதைய நிலை என்ன? அந்த பணம் தற்போது அந்த பணம் தற்போது எங்கே இருக்கிறது. அந்த பணம் மீட்கப்பட்டுவிட்டதா அல்லது இல்லை என்ற விபரத்தை இன்னும் மூன்று நாட்களுக்குள் கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறபட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி தற்போது கரீம் மொரானி கம்பெனியில் இருப்பதாக தெரிகிறது. மேலும் ஊழல் என்பது மிகவும் மோசமான மனி உரிமை மீறலாகும் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதனால் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலை தொடர்புத்துறையாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்டரம் ஏலம் விடப்பட்டதில் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் விசாரணை எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனிமொழி மற்றும் சரத்குமார் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் அடைந்த கம்பெனிகள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி ரூபாய் கைமாறியுள்ளது என்று சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. மேலும் கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. மேலும் சரத்குமாரோடு சேர்ந்து கனிமொழியும் கலைஞர் டி.வி.யை இயக்குவதில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனையொட்டி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் சுப்ரீம்கோர்ட்டும் ஜாமீன் வழங்காது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ.விரைவில் சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று உறுதியாக தெரிகிறது. மொரானி கம்பெனியில் இருக்கும் ரூ.214 கோடியை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்
29 Oct 2025வாஷிங்டன் : 300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல் குறித்து உசேன் போல்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி
29 Oct 2025டெல்லி : டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வியடைந்தது.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.


