எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.14 - கனிமொழி ஜாமீன் மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். சி.பி.ஐ. க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி எங்கே என்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ரூ.1.76 கோடி லட்சம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி.யும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும் சரத்குமாரும் முதலில் டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை விசாரித்த சி.பி.ஐ.கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி,கடந்த மே மாதம் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனையொட்டி டெல்லி ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது பலமுறை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் கொடுக்க டெல்லி ஐகோர்ட்டும் கடந்த 8-ம் தேதி மறுத்துவிட்டது. கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கனிமொழிக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை மாற்றி சொல்ல வைக்க முடியும் என்பதோடு ஆதாரங்களையும் அழிக்க வாய்ப்பு உள்ளது அதனால் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி ஐகோர்ட் அறிவித்தது. இதையும் எதிர்த்து கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி நேற்று சுப்ரீம்கோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். செளகான், ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதோடு மட்டுமல்லாது சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியதாக கூறப்படுவதின் தற்போதைய நிலை என்ன? அந்த பணம் தற்போது அந்த பணம் தற்போது எங்கே இருக்கிறது. அந்த பணம் மீட்கப்பட்டுவிட்டதா அல்லது இல்லை என்ற விபரத்தை இன்னும் மூன்று நாட்களுக்குள் கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறபட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி தற்போது கரீம் மொரானி கம்பெனியில் இருப்பதாக தெரிகிறது. மேலும் ஊழல் என்பது மிகவும் மோசமான மனி உரிமை மீறலாகும் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதனால் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலை தொடர்புத்துறையாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்டரம் ஏலம் விடப்பட்டதில் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் விசாரணை எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனிமொழி மற்றும் சரத்குமார் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் அடைந்த கம்பெனிகள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி ரூபாய் கைமாறியுள்ளது என்று சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. மேலும் கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. மேலும் சரத்குமாரோடு சேர்ந்து கனிமொழியும் கலைஞர் டி.வி.யை இயக்குவதில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனையொட்டி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் சுப்ரீம்கோர்ட்டும் ஜாமீன் வழங்காது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ.விரைவில் சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று உறுதியாக தெரிகிறது. மொரானி கம்பெனியில் இருக்கும் ரூ.214 கோடியை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


