முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் 14 - மும்பை தாக்குதல் வழக்கில் 2 பேரின்  விடுதலையை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மகாராஷ்ட்ரா அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்தி 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு பாகிஸ்தானிய தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அஜ்மல் கசாப் மீதும் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த வேறு சிலர் மீதும் மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அஜ்மல் கசாப் மேல் முறையீடு செய்தார். அவனது மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மும்பை ஐகோர்ட்டு அவனது மரண தண்டனையை உறுதி செய்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஹீம் அன்சாரி, சபாபுதீன் அஹமது ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது. இவர்கள் இருவரின் விடுதலையை எதிர்த்து நேற்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மகாராஷ்ட்ர அரசு மேல் முறையீடு செய்தது. போதுமான சாட்சியங்கள் இல்லாததால் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படுவதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மும்பை கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து இப்போது இந்த மேல் முறையீட்டு மனுவை மகாராஷ்ட்ர அரசு தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்