எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜுன் 19 - சட்டசபை கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் எம்.எல்.ஏ. பதவியை கருணாநிதி வீணாக்குவதைவிட அந்தப் பதவியில் இருந்து விலகிக்கொள்வதே அவருக்கு நல்லது என்று கருணாநிதிக்கு, முன்னாள் எம்.பி. முத்துமணி யோசனை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.முத்துமணி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவை மக்களாட்சி மரபுகளை தொடக்கம் முதல் கட்டிக்காத்து வந்து இருக்கிறது. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அதன் அமர்வு காலங்களில் பங்கேற்பதைப்பற்றி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் சட்டமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருகிறார் கருணாநிதி. எப்படியென்றால் சட்டமன்றத்திற்கு வந்து நுழைவு இடத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டாலே சட்டமன்றத்தில் கலந்துகொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என கருணாநிதி போன்றவர்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையான அந்த விதிமுறை என்ன என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 190(4) கூறுகிறது. அதாவது தொடர்ந்தாற்போல் ஒரு மாநில சட்டமன்ற கூட்டங்களுக்கு அனுமதியின்றி 60 நாட்களுக்கு மேல் ஒரு உறுப்பினர் வருகை தராதிருந்தால் அவருடைய இடம் காலியாக இருக்கிறது என அறிவிக்கப்படலாம். அந்த 60 நாட்களைக் கணக்கெடுக்கும்போது, தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்கு மேல் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. சட்டமன்ற அமர்வுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்குபெற வேண்டும் என்பதே தெளிவான உண்மை ஆகும். இதைப் புரிந்துகொள்ளாமலேயே மக்களாட்சி மரபுகளை புறக்கணிக்கத் திட்டமிடுகிறார். இது அரசமைப்புச் சட்ட விதியையே அவமானப்படுத்துவது ஆகும். ஆகவே இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சட்டப்படி நீக்கப்படுவதற்கான முகாந்திரங்களை உருவாக்குகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 20(1)ன்படி பேரவைக் கூட்டங்களுக்கு வராமல் இருப்பதற்கான அனுமதியை உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். அதற்கான விவாதம் ஏதுமின்றி அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். உள்பிரிவு (2) ன்படி பேரவையின் அனுமதியைப் பெறாமல் தொடர்ந்து 60 நாட்களுக்கு எல்லாக் கூட்டங்களுக்கும் எந்த உறுப்பினராவது வராமல் இருந்துவிட்டால் அவருடைய பதவி காலியானதாக அறிவிக்கப்படும். அதற்குரிய தீர்மானத்தைப் பேரவை உறுப்பினர் எவரேனும் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் திருத்தம் எதுவுமின்றி பேரவையின் வாக்கெடுப்புக்கு விடப்படும். அரசமைப்புச் சட்டத்தின் 190 ஆவது பிரிவின் 4 வது உட்பிரிவின்படி கணக்கிடப்பெற்ற 60 நாட்களுக்குத் தொடர்ந்து எல்லாக் கூட்டங்களுக்கும் வராதவராக அந்த உறுப்பினர் இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளின்படி பேரவையின் கூட்டங்களுக்கு 60 நாட்களுக்கு தொடர்ந்து ஒருவர் வராமல் இருந்தால் அவர் தன்னுடைய உறுப்பினர் பதவியையே இழந்துவிட நேரிடும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பொறுத்தமட்டில் 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் தி.மு.க.வின் பொதுச் செயலாளர் க.அன்பழகனையே தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராகவும், அவரையே எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுத்து, பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமலேயே ஐந்து ஆண்டுகளைக் கழித்துவிட்டார் கருணாநிதி. உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் எதனையும் கொண்டுவராமலேயே அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தவிர்த்துவிட்டார். அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் அத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை.
சென்றமுறை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது பேரவைத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா தி.மு.க. கொடுத்திருந்தது. இந்திய அரசமைப்புச் சட்ட விதி 197 ன்படி 14 நாட்கள் முடிவடைந்த பின்னரே அந்தத் தீர்மானத்தைப் பேரவையில் முன்மொழிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 68 ன் படி பேரவைத் தலைவர் அல்லது துணைத்தலைவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தைக் கொடுக்க விரும்பும் உறுப்பினர் எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் செயலாளருக்கு 14 நாட்கள் முன்னறிவிப்புடன், அதன் பிரதி ஒன்றை பேரவைத் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆயினும், அவ்வாறு தனித் தீர்மானத்தை முன்மொழிய இருக்கும் தன்னுடைய எண்ணம் பற்றி செயலாளருக்கு குறைந்தது 14 நாட்கள் முன்னறிவிப்புக் கொடுக்கப்பெற்றாலன்றி அதற்கான தனித் தீர்மானம் எதுவும் முன்மொழியப்பெறுதல் கூடாது என்றும் விதியில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்கண்ட 68 வது விதியின்படி முன்னறிவிப்புப் பெற்றவுடன், அனுமதிகோரும் தீர்மானம் ஒன்று உரிய உறுப்பினர் பெயரில் அரசமைப்புச்சட்டம் 179 வது பிரிவின் படி தேவைப்படும் 14 நாட்கள் முன்னறிவிப்புக்காலம் முடிந்தவுடன் கூட்டப்பெறும் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இம்மாதிரித் தீர்மானம் கேள்வி நேரம் முடிவுற்றதும் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், பேரவை விதி 69 இல் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறாகப் பேரவைத் தலைவருக்கு எதிராக தீர்மானம் கொடுக்கப்பட்ட நாளிலேயே அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு விதிகளுக்குப் புறம்பாக நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
பேரவைத் தலைவருக்கு கொண்டுவரப்படும் தீர்மானத்தை அனுமதிப்பதற்கு 35 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே போதும். அனைத்திந்திய அ.தி.மு.க. விற்கு 60 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்ததால் தீர்மானத்தை அனுமதிப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. ஆயினும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளிலும் சட்டமன்ற விதிமுறைகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்த 14 நாட்கள் முன்னறிவிப்புக்காலம் முடிவடைவதற்கு முன்னரே தன் விருப்பம்போல், பேரவைத் தலைவர் தனக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தை உடனடியாக மேற்கொள்வதற்கு ஆணை பிறப்பித்தார். அதன் மூலம் விதிகளுக்குப்புறம்பாக பேரவையை நடத்துவதற்கு முற்பட்டார்.
தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய தலைமையில் அமைந்துள்ள அ.தி.மு.க. அரசு, கடந்த காலத்தில் நடைபெற்ற விதி மீறல்களுக்கு விடை கொடுத்துவிட்டு அரசமைப்புச் சட்டத்தின்படியும், பேரவை விதிமுறைகளின்படியும் அவையை நடத்திச்செல்வது என்று உறுதி பூண்டுள்ளது. சட்டப் பேரவையின் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமலே சென்றுவிடுவதை அனுமதிக்க முடியாது. வருகைப் பதிவேடு என்பது உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுவிட்டு உள்ளே வருவதற்காகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. அவைக்கு வராமல் சென்றுவிட்டால் அது வராமைப் பதிவேடாக மாறிவிடும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வருகைக்கான அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்லாமல் வெளியே சென்றுவிட்டால் அவர் பணிக்கு வந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதேபோன்றுதான் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாக கூறி வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட உறுப்பினர் எவரேனும் கூட்டத்திற்கு வராமலே சென்றுவிட்டால் அவர் அன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் கணக்கிடப்படும்.
கருணாநிதியைப் பொறுத்தவரை புறக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் மட்டும் கையொப்பம் இட்டுவிட்டு கூட்டத்திற்கு வராமல் சென்றுவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இம்முறை தன் மகன் ஸ்டாலினை தி.மு.க. சட்டமன்ற குழுவுக்கு தலைவராக ஆக்கிவிட்டு அவர் மட்டும் வெளியிலேயே தங்கிவிட்டார். தொடர்ந்து 60 நாட்களுக்கு அவர் சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமல் இருந்துவிட்டால், அவருடை பதவி காலியாகிவிட்டதாக அறிவிக்கும் தீர்மானம் ஒன்றை பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவாறு முடக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்கு தன்னுடைய உறுப்பினர் பதவியை விட்டு விலகிக் கொள்வதுதான் ஒரே வழியாக அமைந்திருக்கிறது. பதவி இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் வீணாகப் பற்றிக்கொண்டு இருப்பதை விட அதனை விட்டுவிட்டு விலகிக்கொள்வதே அவருக்கு நல்லது. இல்லாவிட்டால் வள்ளுவர் குறிப்பிடுவதைப் போல களர் நிலத்தை ஒத்தவராகவே கருதப்படுவார்.
இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு அணுகுண்டு மிரட்டல் விடுத்த ஈரான்
12 May 2024டெக்ரான் : இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்து உள்ளது.
-
9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் இன்று 4-ம் கட்ட மக்களவை தேர்தல் : முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்
12 May 2024புதுடெல்லி : ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இன்று 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.