எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.29 - மக்களின் சுமையை போக்கும் வகையில் சமையல் எரிவாயு விலையில் ரூ.14.73 குறைகிறது, வாட் வரியை நீக்கி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றாற்போல் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில், 24.6.2011 நள்ளிரவு முதல் டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவிற்கான விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கான விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தி மைய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இதிலும் குறிப்பாக சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டதன் விளைவாக தாய்மார்கள் விரக்தியில் உறைந்து போயுள்ளனர். மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயுவை, கரி, விறகு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக, கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற அளவிற்கு விலையை மைய அரசு உயர்த்தி அறிவித்திருப்பது மக்களால் தாங்க இயலாதது ஆகும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு, மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியினைக் குறைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குவது வேடிக்கையானது ஆகும். நம் நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருட்கள் அனைத்துமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மூலம் மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. உள்நாட்டில் பெறப்படும் கச்சா எண்ணெயின் மூலமும் பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் லாப நோக்கு, நிர்வாகத் திறமை, நிர்வாகச் செலவுகள் ஆகியவையும் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை மட்டும் சுட்டிக்காட்டி மைய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறு, பல்வேறு வழிமுறைகளையும் ஆராய்ந்து, டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயராதவாறு பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல், மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று மைய அரசு அறிவுரை கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே தான், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வினை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், இந்த விலை உயர்வினை மைய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். 2006 முதல் 2011 வரையிலான முந்தைய தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்துவிட்டது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியம், மாநில போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் நிறுவனம் உட்பட பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கிய விவசாயிகள் ஆகியோருக்கு எல்லாம் பல மாதங்களாக நிலுவைத் தொகையை வழங்காமல் விட்டுச் சென்றுள்ளது முந்தைய தி.மு.க. அரசு. இதுவன்றி, கடந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டினால், ஒவ்வொரு துறையும் மிக அதிக அளவிலான தொடர் இழப்பை கடந்த 5 ஆண்டுகளில் சந்தித்து வந்துள்ள சூழ்நிலையில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லாத சூழ்நிலையில், தற்போது சமையல் எரிவாயுவின் விலை மிக அதிகபட்சமாக 50 ரூபாய் அளவுக்கு ஏற்றப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைப் பாதுகாக்க தமிழக அரசால் வழங்கக்கூடிய நிவாரணம் அனைத்தையும் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். அதன் அடிப்படையில், மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு, இனிமேல் குறைப்பதற்கு ஏதுமில்லை என்ற அளவில் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நான் முடிவு எடுத்துள்ளேன்.
அதன்படி, சமையல் எரிவாயு மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 4 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியை 1.7.2011 முதல் அறவே நீnullக்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனையடுத்து, தமிழ்நாட்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு சிலிண்டர் எரிவாயுவின் விலை 404 ரூபாய் 40 பைசா என்ற அளவிலிருந்து 389 ரூபாய் 67 பைசா என்ற அளவிற்கு, அதாவது ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவின் விலை 14 ரூபாய் 73 பைசா அளவிற்கு குறையும் என்பதையும், இனி வருங்காலங்களிலும் சமையல் எரிவாயுவின் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட 50 ரூபாய் விலை உயர்விற்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி மாநில அரசிற்கு ஆண்டொன்றுக்கு 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கெனவே சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டொன்றுக்கு கிடைத்து வந்த 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம் 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.