முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் செல்லும்போது மேலும் ஒரு பக்தர் சாவு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூலை.1 -  அமர்நாத் யாத்திரை செல்பவர்களில் நேற்று மேலும் ஒரு யாத்திரை உயிரிழந்தார். அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்திரை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. அமர்நாத் குகைக்கோயில் இமயமலையில் இருப்பதால் மலைப்பகுதியில் ஏறிச்செல்லும்போது மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு காரணங்களால் ஒரு சில பக்தர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. நேற்றுமுன்தினம் ஒரு பக்தர் உயிரிழந்தார். நேற்று மேலும் ஒரு பக்தர் உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் பெயர் குரன்ஜீ ஷேக் என்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் அமர்நாத்திற்கு குறைந்த வழிப்பாதை வழியாக செல்லும்போது சங்கம் உச்சிப்பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேக்கிற்கு நெஞ்சுவலி வந்தவுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷேக் மரணமடைந்துவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்