முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்துறை அமைச்சர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசு செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:​தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி அமைச்சர் எஸ்.பி .வேலுமணி நேற்று தொழில்துறை, துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் குறித்து தலைமைச் செயலக தொழில்துறை கூட்ட ஆய்வு அரங்கத்தில் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் டிக்கோவின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சூசன் மேத்யூ,  தொழில்துறை முதன்மை செயலாளர் டாக்டர். ந.சுந்தரதேவன்,  சர்க்கரைத் துறை ஆணையர் ராஜீவி ரஞ்சன், சிப்காட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்  நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு உப்புக்கழக மேலாண்மை இயக்குநர் டேவிதார். சிறப்பு முயற்சிகள்துறை செயலாளர் கே.ராஜாராமன், தமிழ்நாடு செய்திதாள் நிறுவனத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தமிழ்நாடு கனிம நிறுவனத்தலைவர்  மற்றும் மேலாண்மை இயக்குநர் பெ.மு.பஷீர் அஹமது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பொறுப்பு அதுல் ஆனந்த், தமிழ்நாடு தொழில் வெடிபொருள் நிறுவன மேலாண்மை இயக்குநர் வா. சம்பத், தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன செயல் துணைத் தலைவர் எம்.வேல்முருகன் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலிட்டிக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்