எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 10 - ஊடகங்களின் மீது பழிபோட்டு ஊழலை மறைக்க முடியாது என்றும், மேலும் சன் டி.டி.எச். நிறுவனத்தின் துணை நிறுவனமான மாக்சியில் முதலீடு செய்த ரூ.600 கோடி லஞ்சப் பணமே என்று சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத்துறை உச்சnullநீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் உலக சாதனை படைத்துவருகிறது. ஊழல் நடைபெறாத துறையே இல்லை என்றாகிவிட்டது. இதன் உச்சகட்டமாக வெளிவந்து தேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்.
உச்சநீnullதிமன்றத்தின் தலையீடு இல்லையென்றால் கறுப்புப்பண விவகாரம் உட்பட பல்வேறு ஊழல் விவகாரங்களை ஊத்தி மூடி இருப்பார்கள் காங்கிரசார். தயாநிதிமாறன் ராஜினாமா குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தி.மு.க. தலைவர், உலகில் குறிப்பாக இந்தியாவில்ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதிமாறன் விதிவிலக்கல்ல. இந்த விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கு தி.மு.க. துணையாக நிற்கும் என்று கூறியுள்ளார். ஊடகங்களின் மீது பழிபோட்டு ஊழல் குற்றச்சாட்டை மறைக்கதிசை திருப்ப தி.மு.க. தலைவர் முயல்கிறார். ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் தயாநிதிமாறன் ராஜிநாமா செய்யவில்லை. மாறாக உச்சநீnullதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடந்துவரும் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் தயாநிதிமாறன் பெயர் இடம்பெற்றிருப்பதால்தான் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஊடகங்கள் இதுகுறித்து, நீnullண்டகாலமாகவே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அப்போதெல்லாம் தயாநிதிமாறன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை
இல்லையென்றால் அவர் ஏன் இப்போது ராஜினாமா செய்ய வேண்டும்.
ஐ.மு. கூட்டணி1 அரசின் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்
அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், ஒதுக்கீடு செய்யாமல் இரண்டாண்டு காலம் இழுத்தடித்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்சி நிறுவனம் விலைக்கு வாங்கிய 30வது நாளில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார் என்பது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில் மாக்சி துணை நிறுவனம் ரூ.600
கோடி மூதலீடு செய்துள்ளது.
அதாவது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டீ நிறுவனம் கலைஞர்
தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கடன் கொடுத்ததைப் போலத்தான் இதுவும் நடந்துள்ளது.
ஆதாயம் பெற்றதன் அடிப்படையில் தரப்பட்ட லஞ்சமே இது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் தயாநிதி மாறன் ராஜிநாமா செய்ய நேர்ந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை இதுவரை தயாநிதிமாறன் ஆதாரப்nullர்வமாக மறுக்கவில்லை. தி.மு.க. தலைவரும் மறுக்கவில்லை.
திரைப்படத்துறை,தொலைக்காட்சித்துறை, பத்திரிகைத்துறை, பண்பலை வானொலி,கேபிள்
இணைப்பு என்று ஊடகத்தில் ஒரு துறை விடாமல் தமிழ்நநாட்டில் மட்டுமின்றி தென்மாநிலங்கள்
முழுவதும் ஆதிக்கம் செலுத்துவது சன் குழுமம் தான். இதற்கு போட்டியாக கிளம்பிய கலைஞர் தொலைக்காட்சியும் இதே போன்று தனது சாம்ராஜ்யத்தை விதரித்தது. குடும்ப சமரசத்திற்குப்பிறகு புகைச்சல் குறைந்தாலும் தனித்தனியாக தொழில் நடந்தது.
பெக்ட்ரம் முறைகேட்டில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார்,
தயாநிதிமாறன் என்று ஒவ்வொருவராக சிக்கும் நிலையில் ஒட்டுமொத்த பழியையும் ஊடகங்களின்
பக்கம் திருப்பிவிட தி.மு.க. தலைமை முயல்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பணப்பட்டுவாடாவை முழுமையாக செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோட்டது தி.மு.க. தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீதான அர்ச்சனை தொடர்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததை மறைக்க, துரத்தும் வழக்குகளிலிருந்து திசைதிருப்ப, ஊடகங்களை கைகாட்டுகிறார் கருணாநிதி.
சன் டி.வி. நிர்வாகி சக்சேனா மீது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடுக்கப்பட்ட புகார் அல்ல. முந்தைய ஆட்சியின்போதே கொடுக்கப்பட்டு கண்டு கொள்ளப்படாத புகாரின் அடிப்படையில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர் நிறுவனத்தின் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிகின்றன. இதற்கெல்லாம் காரணம்
ஊடகமா? இல்லையே. அதிகாரம் கையில் இருந்தபோது செய்த அடாவடிகள் தானே காரணம்.
இப்போது தி.மு.க.வினர் மீது குவியும் நில மோசடி புகார்களுக்கு யார் காரணம்? ஊடகங்களா?
இல்லையே. ஆட்சியில் இருந்தபோது தி.மு.க.வினர் நடத்திய திருவிளையாடல்கள் தானே காரணம். முகம் காட்டும் கண்ணாடி மீது கல்லெறிந்து பயனில்லை. ஊடகங்களை குறை சொல்வதால் உண்மையை மறைத்துவிட முடியாது.
இவ்வாறு சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ