LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கவுகாத்தி,ஜூலை.12 - கவுகாத்தி-பூரி ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தததுதான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து பூரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மாநிலத்தில் உள்ள கம்ரூப் மாவட்டத்தில் ரான்ஜியா-காக்ராபர் இடையே தாத்குசி என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 8 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 100 பேர் படுகாயம் அடைந்தனர். பதுக்கிவைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்ததில் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம்புரண்டன என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 8 பெட்டிகளில் 4 தலைகீழாக கவிழ்ந்தன. மீதி 4 பெட்டிகள் சுமார் 3 அடி ஆழம் தண்ணீர் உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த குண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அதற்கான ப்யூஸ் ஒயர் மற்றும் பல கருவிகள் குண்டுவெடித்த இடத்தில் கிடந்தன. அசாம் மாநில அரசுக்கும் போடாலாந்து இயக்க பிரிவினர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு போடோலாந்து பிரிவை சேர்ந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்கள்தான் குண்டை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து பார்வையிட்டனர். இந்த ரயில் விபத்தில் காயம் அடைந்த 100 பேர் கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 41 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் பூரிக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தையொட்டி ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிடும்படி மத்திய ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராய்க்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். அதன்படி முகல்ராய் நேற்று விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு பயணிகளுக்கு செய்த உதவிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் இந்த விபத்துக்கு யார் காரணமாக இருக்கலாம் என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 26 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 23 hours ago |
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
குறைந்த காற்றின் வேகம் குறைந்தது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
17 Aug 2022சென்னை : குறைந்த காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
17 Aug 2022டெல்லி : உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
-
காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம்: நாக் கமிட்டி
17 Aug 2022கோவை : காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.
-
பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் : விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
17 Aug 2022புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை
17 Aug 2022ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானை சிக்கியது
17 Aug 2022கோவை : தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
-
கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
17 Aug 2022மும்பை : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்
17 Aug 2022சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.
-
ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை அழைப்பை ஏற்க இ.பி.எஸ். மறுப்பு
18 Aug 2022சென்னை: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
63-வது பிறந்தநாள்: நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர்,முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
உலகத்தில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்
18 Aug 2022புதுடெல்லி: உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
-
தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்
18 Aug 2022திருநெல்வேலி: பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
-
தேச நலனுக்கு எதிராக கருத்து: 8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு
18 Aug 2022புதுடெல்லி: தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.