முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாவேரியில் வெடித்தது ஸ்கூட்டர் குண்டு

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை.16 - மும்பை ஜாவேரி பஜாரில் கடந்த 13 ம் தேதி வெடித்தது ஒரு ஸ்கூட்டரில் வைக்கப்படிருந்த குண்டு என்று மத்தி அரசு தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த 13 ம் தேதி மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். நாற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த 3 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் தற்கொலைப்படை தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதா ? என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் மும்பை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.ஜாவேரி பஜாரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 11 கண்காணிப்பு கேமிராக்களின் வீடியோ பதிவுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவற்றை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜாவேரி பஜாரில் வெடித்தது ஒரு ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டு என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.அந்த ஸ்கூட்டர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சந்தேகதத்திற்கு இடமான நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் சிங் கூறினார். இந்த  வீடியோ பதிவுகளில் காணப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்  விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்