முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.20 - நில அபகரிப்பு வழக்கில் கைதானவர்களை காவல்நிலையத்திற்கே சென்று ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட்டை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஜே.எம்.1 கோர்ட்டை புறக்கணிப்பதாக வக்கீல் சங்கம் அறிவித்துள்ளது. 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேரு நகரைச்சேர்ந்த தங்கராஜ் என்பவரது 20 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஆர்.எஸ். கணேசன், பழனி ஆகியோர் அபகரித்ததாகக் கொடுத்த புகாரின் பேரில் நகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கைது செய்த இருவரையும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீசார் வைத்துள்ளனர்.  மதுரை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முத்துக்குமார் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு கோர்ட் நடத்தி அங்கேயே இருவரையும் ரிமாண்ட் செய்துள்ளது.  ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டின் இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்நிலையத்தையே கோர்ட்டாக மாற்றியதால் நாங்கள் கைதான இருவருக்கும் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தோம். ஆனால், அவர் வாங்க மறுத்துவிட்டார். 

எனவே, காவல்நிலையத்தை கோர்ட்டாக மாற்றிய ஜே.எம்.1 மர்ஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஜே.எம்.1 கோர்ட்டை வக்கீல்கள் தொடர்ந்து புறக்கணிப்பர். இச்சம்பவத்தைக் கண்டித்து நேற்று ஒரு நாள் அனைத்துக் கோர்ட்டுகளையும் புறக்கணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். வக்கீல்கள் புறக்கணிப்புப்போராட்டத்தால் மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்