எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை,மார்ச்.- 3 - மூன்றரை சதவீத உள் ஒதுக்கீடு மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டார் கருணாநிதி என்று நெல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாளையொட்டி நெல்லை மேலப்பாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர்யா பாலு தலைமையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இநத கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், தமிழர் சமுதாயத்தின் தன்னிகரில்லா தலைவரும் கூட. இத்தகைய பெருமை வாய்ந்த அவர் துவக்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கருணாநிதியின் சூழ்ச்சியால் இரண்டாக பிளவுபட்டு இந்திய தேசிய லீக் என்ற புதிய இயக்கமாக உருவெடுத்தது. ஆக, முஸ்லீம் இயக்கம் பிளவுபடுத்தப்பட்டதற்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதிதான்.
ஆனால் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போதே இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்னையில் இருந்து நேரடியாக விமான சர்வீஸ் பெற்றுத் தந்தார். பின்னர் முதல்வராக பொறுப்பேற்றவுடன் இஸ்லாமியர்களுக்காக எம்.ஜி.ஆர். கொண்டு வந்த உலமா பென்சன் திட்டத்தை உயர்த்தி 2 ஆயிரம் பேருக்கு வழங்கினார் ஜெயலலிதா.
மேலும் வக்பு வாரியத்துக்கு முதல் முதலாக பெண்மணியை நியமித்தார். உமறுப்புலவருக்கு மணிமண்டபம், காயிதே மில்லத் பெயரில் மணி மண்டபம் மற்றும் அவரது பெயரில் கல்லூரி ஆகியவற்றை நிறுவியதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ 25 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கியவர் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. அது மட்டுமல்லாது, அறிஞர் டாக்டர் அப்துல் கலாம் இந்திய குடியரசு தலைவராக வர முன்மொழிந்தவர் ஜெயலலிதாதான்.
ஆனால் சிறுபான்மை மக்களுக்கு நான்தான் பாதுகாவலன் என்று மார்தட்டிக் கொள்ளும் கருணாநிதி, ஆயிஷா என்ற பெண்மணியை தீவிரவாதி போல் பிரகடனப்படுத்தி சோதனை என்ற பெயரில் கோஷா பெண்கள் அனைவரையும் அவமானப்படுத்தினார். அது மட்டுமல்லாது, வக்பு வாரியத்துக்கு ஜெயலலிதா வழங்கி வந்த ஒரு கோடி ரூபாயை நிறுத்தியவர் கருணாநிதி. நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்ற பெயரில் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது நீதிபதி குமார் ராஜரத்தினம் தலைமையில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆய்வு வரம்பை நிர்ணயித்து முதல் முறையாக கமிஷனை அமைத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும். ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் இந்த கமிஷனை கலைத்து விட்டு புதிய கமிஷனை அமைத்து அவசர கோலத்தில் அறிக்கையை பெற்று பிற்பட்டோருக்கான 30 சதவீத உள் ஒதுக்கீட்டில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா மூன்றரை சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி.
மேலும் மூன்றரை லட்சம் பணியாளர்களை நியமித்ததாக சொல்லும் கருணாநிதியின் கணக்குப்படி இந்த இரு சமூகங்களும் ஒன்றரை சதவீதத்திற்கு குறைவாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடங்களை பெற்றிருக்கிறார்கள். இலக்கிய வசனம் பேசி இனியும் சிறுபான்மையின மக்களை கருணாநிதி ஏமாற்ற முடியாது. சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்ற சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


