முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை திமுக பகுதி செயலாளர் ஒச்சுபாலு கைது

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.7 - மதுரை மாநகர் திமுக பகுதி செயலாளர் ஒச்சுபாலு கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தததும் முதல்வர் ஜெயலலிதா திமுகவினர் செய்த நில மோசடி புகார்களை விசாரிக்க தனி பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்த பிரிவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முன்னாள் அமைச்சர்கள் உள்பட திமுக நிர்வாகிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் தளபதி, முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதன், பூண்டி கலைவாணன், மத்தியஅமைச்சரின் நெருக்கமானவரான பொட்டுசுரேஷ், அட்டாக் பாண்டி, உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்கு, தாக்குதல், மிரட்டுதல் உள்பட பல்வேறு வன் செயல்களிலும் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த எந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது போலீசாரின்அதிரடி நடவடிக்கையால்  நில மோசடியில் ஈடுபட்ட மதுரை கிழக்கு மண்டல திமுக தலைவர் வி.கே.குருசாமி, பொட்டுசுரேஷ், மாவட்ட செயலாளர் தளபதி, உதயகுமார், அட்டாக் பாண்டி உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார். மதுரை 3ம் பகுதி திமுக செயலாளராக இருப்பவர் ஒச்சுபாலு. இவர் கடந்த 2010ம் ஆண்டு நாடார் சங்கத்தை சேர்ந்த புறா மோகன் என்பவரை தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கினார். இது குறித்து அவர் மதுரை கரிமேடு போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து ஒச்சுபாலு மீது 307  (கொலை முயற்சி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்