முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.10 - தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து அடுத்த கல்வி ஆண்டுமுதல் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதேபோல பெற்றோர்கள் தரப்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பாஞ்சால், தீபக்வர்மா, செளஹான் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது. வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமுல்படுத்த வேண்டும் என்றும் 10 நாட்களுக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை மாணவ - மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

25 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவை பிறப்பிப்பதாக கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பெற்றோர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்