எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.19 - எந்த திட்டமாக இருந்தாலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து விரிவாக ஆய்வு செய்து அதன் பின்னர் அறிவிப்புக்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். ஆகவே 2012 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தபடி மின்வெட்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீது அளித்த பதிலுரை வருமாறு:
தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சட்டப்படி, 1.தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 2.தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம், என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
2006-ல் ஜெயலலிதா ஆட்சியில் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,031 மெகாவாட். 2001 முதல் 2006 முடிய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் 2047 மெகாவாட்ஸ். அப்போது தமிழகம் மின்சார மிகை உற்பத்தி மாநிலமாக திகழ்ந்தது. அண்டை மாநிலங்களுக்கும் மின்சாரம் விற்பனை செய்ப்பட்டது. தற்போதைய மின் உற்பத்தி நிலை 10,237 மெகாவாட்.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் கூடுதலாக மின் உற்பத்தி திறன் கிடைத்தது 206 மெகாவாட் மட்டுமே. தேவைக்கேற்ப கூடுதலாக உற்பத்தி திறன் கிடைக்க வழிவகை செய்யவில்லை. 10,237 மெகாவாட்டில் மத்திய தொகுப்பில் கிடைப்பது 2,000 மெகாவாட் மட்டுமே.
தனியார் மின் உற்பத்தியில் 600 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. தற்போது 8000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக மின் தேவை 10,500 மெகாவாட் முதல் 11,500 மெகாவாட் தேவைப்படுகிறது. பற்றாக்குறை 2500 முதல் 3500 மெகாவாட் ஆகும்.
கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் மின் தேவை ஆண்டொன்றுக்கு 8 சதவீதம் அளவில் அதிகரித்தது. ஆனால் இவ்வளர்ச்சியை ஈடுகட்டும் அளவிற்கு மின் உற்பத்தி திட்டங்கள் இல்லை. மாநிலத்தின் அதிகரித்து வந்த மின் தேவையை பூர்த்தி செய்ய குறிக்கோளுடன் மிகப்பெரிய அளவிலான புதிய மின் திட்டங்களை மேற்கொள்ளவும், இதுவரை தொடங்கப்படாத மின் திட்டங்களை செயல்படுத்தவும், மற்றும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரைவாக நிறைவு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மின் தேவை, மின் உற்பத்திக்கும் உள்ள இடைவெளியினை சரிசெய்யவும், இந்த இடைவெளியை சரிசெய்து மின்சார பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதுவரை 3 மாதங்களுக்குள் நான்கு முறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, இந்த துறைக்கு நல்லதொரு வழிகாட்டு விதிமுறைகலையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
மின்வெட்டை படிப்படியாக குறைப்பதற்கு முதற்கட்டமாக உடனடி தேவையாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி 90 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
1.7.11 முதல் நகர் மற்றும் ஊரக பகுதிகளுக்கு (சென்னை தவிர) 3 மணிநேரம் மின் தடை 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 8.8.11 முதல் செப்.2011 வரை காற்றாலை உபரி மின்சாரத்தை பயன்படுத்தும் பொருட்டு இசைவு தெரிவிக்கும் உயர் அழுத்த மின் பயனீட்டாளர்கலுக்கு இரவு 10.00 மணிமுதல் மறுநாள் காலை 5.00 மணிவரை 20 விழுக்காடு மின் வெட்டு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும்.
9.1.10 முதல் மூடப்பட்டிருந்த வழுதூர் எரிவாயு மின் நிலையம் -2 (92.2 மெகாவாட்) மீண்டும் 17.5.11 அன்று இயக்கிவைக்கப்பட்டது. 17.7.10 முதல் மூடப்பட்டிருந்த குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தில் (101 மெகாவாட்) பாரத மிகுமின் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட புதிய எரிவாயு நிலைப்பான் மாற்றப்பட்டு 28.5.11-ல் மீண்டும் இயக்கிவைக்கப்பட்டது.
காரே பெல்மா செக்டர்-11 நிலக்கரி பகுதியிலிருந்து நிலக்கரியை எடுப்பதற்கும் மற்றும் சுரங்க வளாக அனல் மின் நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. 400 கி.வோட் சுங்குவார்சத்திரம் துணை மின்நிலையம் அதனை சார்ந்த மின்னூட்டியையும் ரூ.227.35 கோடி செலவில் 16.8.11 அன்று ஜெயலலிதா திருக்கரத்தால் இயக்கி வைத்துள்ளார்.
178 மெகாவாட் அளவிற்கு புதிய காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. மே 2011-லிருந்து எண்ணூர் அனல் மின்நிலையம் தவிர்த்து அனைத்து அனல் மின் நிலையங்களின் செயலாக்கம், கணிசமாக அதிகரிக்கப்பட்டு மின் சுமை காரணி 90 விழுக்காட்டிற்கு மேல் செயல்பட்டு வருகிறது. 2 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின் உற்பத்தி கூட்டப்பட்டுள்ளது. 53.25 கி.மீ நீளமுள்ள 230 கி.வோ. மின் சுற்று பாதை ஒத்தக்கால் மண்டபத்திலிருந்து பல்லடம் வரை பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளது. 400 கி.வோ. சுங்குவார்சத்திரம் துணை மின்நிலையத்தையும் 400 கி.வோ. புதுச்சேரி - திருபெரும்புதூர் மின்னூட்டியையும் இணைக்கும் 16.28 சுற்று கி.மீ நீளமுள்ள இணைப்பு பாதை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. தாம்பரம் பகுதி சுற்று வட்டாரத்திலுள்ள தாழ்வழுத்த மின் பகிர்மான குறைபாடுகளை சீர்செய்வதற்கும், சென்னை தெற்கு மண்டலத்தில் 2 புதிய 33/11 கி.வோ. துணை மின் நிலையங்களில் ஒன்று கோவிலம்பாக்கத்தில் ரூ.21.22 கோடி செலவிலும், மற்றொன்று இராஜகீழ்ப்பாக்கத்தில் ரூ.12.89 கோடி செலவில் இந்த மாத இறுதிக்குள் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்கள். பவானி கட்டளை தடுப்பணை-2 (2 15 மெகாவாட்) 400 கோடி ரூபாய் செலவில், புனல் மின் நிலையத்தின் அலகு-1 (15 மெகாவாட்) வரும் செப்டம்பர் மாதம் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் காரணமாக சென்னை தவிர மற்ற பகுதிகளில் 3 மணிநேரமாக இருந்த மின்வெட்டு 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த ஆட்சியில் கலவரமாக இருந்த நிலை மாறி தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது, மின்நிலவரம்.
மின்வெட்டை முழுமையாக நீக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வருமாறு:
ஆகஸ்ட் 2012 முழுமையாக மின்வெட்டு ரத்து செய்யப்படும். எந்த திட்டமாக இருந்தாலும் சாதக பாதகங்களை விரிவாக ஆய்வு செய்து அதன் பின்பு அறிவிப்புகள் வெளியிடுபவர் ஜெயலலிதா. அறிவித்தபடி மின்வெட்டு பிரச்சனை நிச்சயம் தீர்க்கப்படும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இலக்கணமாக திகழ்பவர் ஜெயலலிதா. 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாத்ததிற்குள் தமிழகத்திற்கு மின்வெட்டு முழுமையாக அகற்றப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதற்கேற்ப சில வழிமுறைகளை வகுத்து கொடுத்து இருக்கிறார். நடைமுறையிலுள்ள மின் திட்டங்களை இயக்கத்திற்கு கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2012 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநில கட்டமைப்பு 4640 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2012ம் ஆண்டு இறுதிக்குள் மாநில கட்டமைப்பு 4,640 மெகாவாட் கூடுதல் நிறுவுதிறன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் வடசென்னை நிலை-2(1,200 மெகாவாட்), மேட்டூர் நிலை -3(600 மெகாவாட்), தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்-தேசிய அனல்மின் கழகம் கூட்டு முயற்சி(1,041 மெகாவாட்), தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்-நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கூட்டு முயற்சி-தூத்துக்குடி(387 மெகாவாட்), சிறிய மற்றும் மிகச்சிறிய புனல்மின் திட்டங்கள்(7 திட்டங்கள்-90 மெகாவாட்), கூடங்குளம்(925 மெகாவாட்), பி.எப்.பி.ஆர்.கல்பாக்கம்(167 மெகாவாட்), நெய்வலி டி.எஸ்.2 (230 மெகாவாட்).
அடுத்ததாக தொலைநோக்கு பார்வையுடன் 5,100 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நீண்ட காலத்திட்டங்களாகும்.
வடசென்னை நிலை-3 (800 மெகாவாட்- எதிர்பார்க்கும் காலம் 2015ம் ஆண்டு), வடசென்னை நிலை-4 (1,600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு), உடன்குடி (1,600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு), எண்ணூர் இணைப்பு(600 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2015ம் ஆண்டு), குந்தா நீரேற்று புனல் மின் நிலையம்(500 மெகாவாட்-எதிர்பார்க்கும் காலம் 2016ம் ஆண்டு)
குந்தா நிரேற்று மின் நிலையம் தமிழக மின்சார பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை மத்திய அரசின் நதிநீர் ஆணையம் குந்தா திட்டம் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை என்று கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் உண்மையில் இந்த குந்தாநதி காவிரி நதியின் கிளை நதியின் கிளை நதி. இதிலே மற்ற மாநிலங்கலுக்கு சம்பந்தம் இல்லை. சம்பந்தப்பட்ட கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. மூன்று மாநிலங்களுக்கும் பலமுறை கோரியும் கிடைக்கவில்லை. புதுவை மாநிலம் மட்டுமே ஒப்பந்தம் அளித்துள்ளது. மற்ற மாநிலங்கள் அனுமதி மறுவிட்டன. இது மிகவும் வருத்ததற்குரிய விஷயம் என்னவென்றால் காவிரி நீர் சம்பந்தப்பட்ட மாநிலங்களை எந்த வகையிலும் பாதிக்காத கூடுதல் தண்ணீர் தேவைகள் கிடைக்கவில்லை. காவிரி பிரச்சனைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்வதும் மாநில அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்வதும் மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது. ஆகவே முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி பெற வேண்டிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து தொடர் முயற்சிகளை மேற்கொள்வார் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.