எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஆக.- 22 - சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட இடத்தில் அதிநவீன சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் ஏகோபித்த வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலை ஓமந்தூரான் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கடந்த தி.மு.க. ஆட்சியினரால் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அதற்கு திறப்பு விழாவையும் நடத்தினார்கள். இக்கட்டிடம் தேவையற்றது. மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமர்ந்தவுடன் புகழ்வாய்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் செயல்படுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தீர்க்கதரிசனமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவரது வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. பிரதான எதிர்க்கட்சியாகக் கூட மக்கள் தி.மு.க.வை அங்கீகரிக்க வில்லை. தமிழக மக்களின் நலனே தன்னலமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக செலவிடப்பட்ட பல நூற்றுக்கணக்கான கோடி மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதற்காக அவர் ஆழ்ந்து சிந்தித்துள்ளார். அதன் விளைவாக தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு உன்னதமான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று சட்டமன்றக் கூட்டத்தில் வெளியிட்டார்.
புதிய தலைமைச்செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒரு பகுதி மருத்துவக் கல்லூரியாக செயல்படும், மற்றொரு பகுதி மருத்துவ ஆராய்ச்சிக்காக சிறந்த தரத்துடன் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை செயல்படும். இந்த மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் இயங்கும் என மகத்தான திட்டத்தை அறிவித்தார்.
இதற்கு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடிய உன்னதமான திட்டங்களில் கூட அதில் குறையுள்ளது, இது மக்களுக்கு பலனளிக்காது என சப்பை காரணங்களைக் கூறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இத்திட்டத்தையும் வரவேற்றுள்ளார். குறை சொல்ல வேண்டுமென்பதற்காக அதற்கு வழிகோல் காட்டியவன் நானே என்று கூறி தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டுள்ளார். இத்திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் நகர மக்களின் கருத்து
ஜெயகிருபா(25) இல்லத்தரசி.
ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். வளர்ச்சியுற்ற மருத்துவ வசதியை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஏழை மக்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழக முதல்வர் அம்மா அறிவித்துள்ள திட்டம் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மருத்துவக்கல்லூரியின் அறிவிப்பு எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு அமல்படுத்தியுள்ளார்கள். இதற்காகவே அம்மாவிற்கு நன்றி கூற வேண்டும்.
சச்சிதானந்தம்(47).
இத்திட்டம் சூப்பர் திட்டம். வரவேற்கக் கூடிய அறிவிப்பு. என்னைப்போன்ற ஏழைகளுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. அதிநவீன மருத்துவக் கல்லூரிகள் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளதால் மருத்துவ சிகிச்சைக்கு எளிதாக அமையும். இத்திட்டத்தை யாராலும் குறைகூற முடியாது என்றார்.
கோமதி(29) இல்லத்தரசி.
தமிழக மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடிய திட்டங்கள் அனைத்தும் எங்களைப் போன்ற நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவே வெளியிடுகிறார். அதேபோன்று தான் தற்போது அறிவித்துள்ள மருத்துவமனையும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும் என்றார்.
ராஜசேகர்(51) டீக்கடைக்காரர்.
மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதற்காகவே தமிழக முதல்வர் அறிவித்துள்ள இத்திட்டம் வரவேற்கக் கூடியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சென்னைக்கு வரவுள்ளதால் இது ஏழை பாமர மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இத்திட்டத்தில் சுயநலம் கிடையாது. பொதுநலமே மேலோங்கி உள்ளது. இம்மருத்துவமனையினால் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார