எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை செப்.- 17 - முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு அளித்த வாக்குறிதிகளை நிறைவேற்றி வருகிறார். செம்பூரில் 214 இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றினை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா பேசினார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பூரில் தமிழ முதல் அமைச்சர் அறிவித்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாராமன் தலைமையுரையாற்றினார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கி பேசுகையில், தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை செயலாக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டம் காக்களுரில் இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிகள், ஏழை, எளியவர்களுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் ஆகியவை வழங்கி திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டவாரியாக மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட செம்பூர் கிராமத்தில் எளிய விழாவாக நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு விழாக்களை எளிமையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இத்தகைய விழாக்களுக்கு ஆகின்ற செலவுகளை அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதற்கிணங்க ஒரு சிறிய சாமியானா போட்டு எளிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. முதலைமைச்சர் ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கின்ற சாதாரணத் தொண்டர்கள் எல்லாம் பல்வேறு நிலையில் பொறுப்புகளை வழங்குகிறார்கள். ஒரு தொண்டன் எந்த அளவிற்கு அவருடைய வாழ்வில் உச்சத்தைப் பெறமுடியுமோ அந்த நிலையில் என்னைப் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு வழங்குகின்ற வாய்ப்பை பெற்றமைக்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று நான்கு மாதங்கள் தான் ஆகிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை எல்லாம் தரமாக நான்கு மாதத்தில் இந்த மிக்சி, கிரைண்டர்,மின்விசிறி ஆகியவை எல்லாம் தரமாக தயாரித்து இங்கே வழங்கப்படுகிறது. அதேபோல் குடும்பத்தலைவியாக இல்லத்தரசிகளுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் போது அவர்களுக்கு தரமான மடிக்கணிணிகள் (லேப்டாப்) வழங்குவது ஒரு கனவாக உள்ளது. அந்தக்கனவை நிறைவேற்றும் வகையில் இந்தியாவிலேய எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை எல்லாம் தரமாக தயாரித்து வழங்கிட வேண்டும். அந்த விதத்தில்தான் மக்கள் தொகை குறைவாக உள்ள கிராமத்தை தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்ச்சியாக செயல்பட்டு அனைவருக்கும் கிடைக்கும். தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.500லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உழவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் சீரியமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதாவிற்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் வகுத்த திட்டம் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் படிப்படியாக கிடைக்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயலாளரும், பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினருமான முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், திருப்புவனம் ஒன்றியச்செயலாளர் எஸ்.பி.கணேசன், பேரவை மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் கண்ணதாசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் வேம்புலிங்கம் வரவேற்றார். சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் துர்கா மூர்த்தி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.