முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீரில் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு,அக்.9 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பகுதியில் உள்ள தோடா மாவட்டத்தில் ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே பாதுகாப்பு படையை சேர்ந்த ராஷ்ட்ரீய ரைபிள் படை பிரிவினர் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர்களும் போலீசாரும் வருவதை பார்த்த தீவிரவாதிகள் இயந்திர துப்பாக்கியால் சரமாரியா சுடத்தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பிச்சுட்டனர். இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான் மேலும் பல தீவிரவாதிகள் துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் தப்பிச்சென்றுவிட்டதாக தெரிகிறது. சுட்டுக்கொல்லப்பட்டவனின் உடலை சோதித்து பார்த்ததில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் அவன் பெயர் ஆசாத் ஹூசைன் வாணி என்றும் தெரியவந்தது என்று தோடா மாவட்ட போலீஸ் அதிகாரி வீரேந்தர் சர்மா ஜம்முவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். சுட்டுக்கொல்லப்பட்டவனிடம் இருந்து ஒரு பிஸ்டல் துப்பாக்கி, 2 மாத இதழ்கள், வெடிமருந்து பொருட்கள் ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன. கடந்த 1998-ம் ஆண்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பதும் ஒரு தச்சுத்தொழில் செய்பவரை படுகொலை செய்த வழக்கு அவன் மீது உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் ஹிஸ்பல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம் என்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம் என்றும் இரு தீவிரவாத பிரிவுகள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் வெடித்த வெடிகுண்டை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கம்தான் வெடிக்க செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்