முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணாமல் போன தி.மு.க. தலைகள் கருத்து சொல்ல மறுத்த ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.- 11 - ரெய்டு நடந்தபோது போட்கிளப் ஹவுஸ் பக்கம் ஏராளமான தி.மு.க.வினர் குவிந்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு ஈ., காக்கை கூட வரவில்லை. தயாநிதிமாறன் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது சுற்றி சுற்றி வந்த ஏராளமான தி.மு.க.வினர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. தயாநிதிமாறனின் நெருங்கிய ஆதரவாளர் பரிதி இளம் வழுதி, மா.சுப்ரமண்யம் உட்பட பலரையும் காணவில்லை. ரெய்டு பற்றி திருச்சியில் உள்ள மு.க.ஸ்டாலினிடம் கருத்து கேட்டபோது டி.வி. பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும், தலைவரை பார்த்தபின் கருத்து கூற முடியும் என்று சொல்லி உள்ளே சென்று விட்டார். மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்தை கேட்க செய்தியாளர்கள் முயன்றபோது அனைவரும் ஓடி ஒளிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்