எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,அக்.- 13 - கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டியிருப்பதாலும் மக்களின் மின்சார தேவை அதிகரித்து வருவதாலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் அனல் மின்சாரம் மற்றும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பானது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. இதனை கருத்தில் கொண்டும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் இந்தியா-ரஷ்யா இடையே கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி நெல்லைமாவட்டம் கடல்பகுதியையொட்டியுள்ள கூடங்குளத்தில் 3-கட்ட அணுமின்சார உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்ட பணி முடிந்து அணுமின்சார உற்பத்தியை தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும்பட்சத்தில் அந்த அணுமின் உற்பத்தி நிலையத்தால் பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிருக்கு போராட்டம் என்று கருதி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆரம்பத்தில் போராட்டம் சாதாரணமாக இருந்தது. ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த போராட்டம் வலுவடைந்து ஒரு லட்சம் பேர் சேர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. அப்போதுதான் மத்திய அரசு கொஞ்சம் நினைத்து பார்க்கத்தொடங்கியது. மேலும் இந்த போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி, மக்களின் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு விளக்கினார். மேலும் போட்டக்குழுவுடன் மத்திய அரசு பிரதிநிதியும் மத்திய அமைச்சருமான நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பும் பின்பும் முதல்வர் ஜெயலலிதாவை நாராயாணசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தினர். கூடங்குளம் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் தொடர ஆதரவு கொடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மின்சாரத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் போகின்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளின் மூலம் 2 ஆயிரம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 925 மெகாவட் தமிழகத்திற்கு கொடுக்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தை கைவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். அணுசக்தி மின்சாரத்திற்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடமாட்டோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். கூடங்குளம் மக்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. அவர்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 4 நாட்களில் எழுதி உள்ள 2-வது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராடப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ள நிலையில் பிரதமர் இந்த பதில் கடிதத்தை எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டு 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: அமைச்சர்
07 Jul 2025சென்னை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
பறந்து போ திரைவிமர்சனம்
07 Jul 2025தனது மகனின் ஆசை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் தான் செல்லாத உயரத்திற்கு தன் மகன் செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெற்றோரின் கதை தான் இந்த பறந்து போ படம்.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
ஜூலை 18-ல் பீகார் செல்கிறார் பிரதமர் மோடி
07 Jul 2025பாட்னா : பீகாரில் உள்ள மோதிஹரிக்கு ஜூலை 18ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
மடப்புரம் கோவில் காவலாளி மரணம்: த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
07 Jul 2025சென்னை, திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது 10-ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Jul 2025புது டெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு
-
மத்திய பிரதேசத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு செல்லாமல் ரூ.28 லட்சம் ஊதியம் பெற்ற காவலர்
07 Jul 2025போபால் : மத்திய பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அ
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
பிரத்யேக பேருந்தில் ரோடு ஷோ தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு- ஷோ தொடங்கினார்.
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
3பி.ஹெச்.கே திரை விமர்சனம்
07 Jul 2025மனைவி, மகன், மகள் என்று குறைவான வருமானத்தில் வாழும் சரத்குமார், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.