முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில்வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.19 - மதுரையில் 3 இடங்களில் வாக்கும் எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இருக்கும்அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தெரிவித்தார். மதுரை மாநகராட்சிக்கு மேயர் உள்பட 99 வார்டுகளில் வாக்குப்பதிவு ஏந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த ஓட்டுகள் அனைத்தும் வரும் 21 -ம் தேதி எண்ணப்படுகிறது. நேற்றுமுன்தினம் மாலையில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் `சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மதுரை மருத்துவக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு ஒதுக்கப்படுள்ள அறைகளில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி `சீல்' வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 3 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

அடுத்து கல்லூரியின் வாசல்களிலும், நுழைவு வாயில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைத்து இருக்கும் மையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்