எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.21 - புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் வரும் 25-ம் தேதி பதவி ஏற்கின்றனர். மாநகராட்சி கூட்ட அரங்கு 100 கவுன்சிலர்கள் அமரும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி தேர்தல் வாக்குஎண்ணிக்கை இன்று 21-ம் தேதி நடக்கிறது. மதுரை மருத்துவக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் ஆகிய 3 மையங்களில் வாக்குஎண்ணிக்கை நடக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் மேயர் மற்றும் கவுன்சிலருக்கு வாக்குஎண்ணிக்கை ஒரே நேரத்தில் நடைபெறும். கவுன்சிலர் தேர்தல் முடிவு உடனுக்குடன் அறிவிக்கப்படும். மேயருக்கு 100 வார்டுகளிலும் கிடைத்த வாக்குகளின் கூட்டுதொகை கணக்கிடப்பட்டு வெளியாகும். எனவே மேயர் தேர்தல் இறுதி முடிவு மாலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் புதிய மேயர் மற்றும் 99 வார்டுகளின் கவுன்சிலர்கள் வரும் 25-ம் தேதி பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆணையாளர் நடராஜன் செய்து வருகிறார். மாநகராட்சி, மாமன்றத்தில் இதுவரை 72 கவுன்சிலர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி இருந்தது. மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 கவுன்சிலர்கள் வருவதால், அதற்கு ஏற்ற வகையில் மாநகராட்சி மன்றம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
துணை மேயர் மற்றும் 4 மண்டல தலைவர்கள் தேர்தல் வரும் 29 -ம் தேதி நடக்கிறது. இவர்களை கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
மதுரை 1971 -ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978 -ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் படி 1978 -ம் ஆண்டில் முத்து, 1980 -ம் ஆண்டில் கிருஷ்ணன், 1982 -ம் ஆண்டில் பட்டுராஜன் மேயராக இருந்தனர். இதன் பிறகு மேயர் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டு 1999 -ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடந்தது. மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதில் 2001 -ம் ஆண்டில் குழந்தைவேலு, 2006 -ம் ஆண்டில் மேயயரை கவுன்சிலர்கல் தேர்வு செய்தனர். இதில் தேன்மொழி மேயரானார். இந்த தேர்தலில் மீண்டும் மேயரை மக்கள் நேடியாக தேர்வு செய்யும் முறை அமலாகி உள்ளது. புதிதாக 8 -வது மேயர் பதவி ஏற்க உள்ளார்.
மதுரை மாநகராட்சி 37 ஆண்டுகளுக்கு பிறகு 52 சதுர கி.மீ. பரப்பில் இருந்து 148 ச.கி.மீ. ஆக எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஆனையூர் நகராட்சிகள், திருநகர், ஆர்.வி.பட்டி, விளாங்குடி, பேரூராட்சிகள், உத்தங்குடி, மேலமடை, திருப்பாலை, கண்ணநேந்தல், நாகனாகுளம், வண்டியூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, சின்னஅனுப்பானடி, புதுக்குளம் பிட் -2, தியாகராஜர் காலனி ஆகிய 11 ஊராட்சிகளை வரும் 24-ம் தேதி மாநகராட்சி ஏற்கிறது.
மேயருக்கான 100 பவுன் தங்க மாலை, வெள்ளி செங்கோல் மாநகராட்சி கருவூலத்தல் உள்ளது. அதனை அதிகாரிகள் சரிபார்த்து, பாலிஸ் செய்யதுள்ளனர். மாநகராட்சி முத்திரை பதிக்கப்பட்ட தங்க பதக்கங்களை தங்க சங்கிலியில் மாலையாக கோர்க்கப்பட்டுள்ளது. இதை புதிய வெல்வெட் துணியில் பொருத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர். பதவி ஏற்பில் தங்கமாலை அணிவித்து, மேயர்கையில் மாநகரை ஒப்படைக்கும் விதமாக வெள்ளி செங்கோல் அளிக்கப்படும். அந்த செங்கோலும் பாலிஸ் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேயருக்கு அணிவிக்கப்படும் கருப்பு நிற புதிய அங்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026


