முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,அக்.21 - திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி அமோக வெற்றி பெற்றதையொட்டி மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் பஸ்நிலையம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்டசெயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ தலைமையில் இந்த வெற்றியை அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர். பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிமுகவினர் இனிப்பு வழங்கி தேர்தல் வெற்றியை கொண்டாடினர். 

  இந்த நிகழ்ச்சியில் மதுரை மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் பெ.சாலைமுத்து, பூமிபாலகன், அண்ணாநகர் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி, மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் பி.எஸ்.முருகன், வடக்குதொகுதி இணை செயலாளர் எம்.சுப்பு, வட்ட செயலாளர் மலைக்கள்ளன், திருப்பரங்குன்றம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பி.ஏ.வீரமணி, தொழிற்சங்க இணை செயலாளர் மதுரை வீரன், தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.பாண்டியன், வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், தியாகராஜன், சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்