எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 8 - நாடார் சமுதாயத்திற்கு 62 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது என்று சரத்குமார் கூறினார். நாடார் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன், நாடார் மகாஜன சங்க செயலாளர் கரிக்கோல் ராஜ், டி.என்.தனபாலன், டி.பத்மநாபன், ஏ.சுபாஷ் பண்ணையார், மயிலை சி.பெரியசாமி, நெல்லை நெடுமாறன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடார் சமுதாயத்தை ஒருங்கிணைத்து வருகிற தேர்தலில் எங்களது பலத்தை நிரூபிப்போம். 62 தொகுதிகளில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. எங்களை மதித்து சீட்களை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி சேருவோம். நாடார் சமுதாயம் உழைக்கின்ற சமுதாயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சமூக சிந்தனையும், கொடை குணமும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதை முழுமையாக மனதில் கொண்டு, தாம் ஈட்டுகின்ற பொருளில் தமிழகத்தில் கல்வி நிலையங்கள், திருமண கூடங்கள் என்று அனைத்து சமுதாய மக்களும் பயன் பெற, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் பாதையில் அயராது உழைத்து வருபவர்கள், தமிழகத்தில் தென் பகுதிகளில் இருந்தாலும் தங்கள் சமுக சிந்தனையாலும், ஒருமைப்பாட்டின் தத்துவத்தை உணர்ந்தவர்களாக அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வணிகம் செய்து ஒற்றுமையை வளர்த்து பிறர் எழும் முன் எழுந்து கடுமையான உழைப்பிற்கு பிறகு, ஊர் உறங்கிய பிறகு உறங்கச் செல்லும் உழைப்பாளிகள்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சங்கம் அமைத்து தொண்டாற்றி வருகின்ற இந்த சமுதாயத்திற்கு தமிழகத்தில் மட்டும் 3,000 சங்கங்களுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இப்படி பல பெருமைகள் உடைய இந்த சமுதாயம் கர்ம வீரர் காமராஜருக்குப் பின் ஓர் குடையின் கீழ் ஒன்று சேர்ந்து அரசியல் அங்கீகாரம் பெற இயலாமல் போனது நமக்கு வேதனைதான். இந்நிலையிலிருந்து சமுதாயத்தை ஒன்றுபடுத்தி ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் பெருந்தலைவர் விட்டு சென்ற சமூக, அரசியல், மக்கள் பணியை தொடர ஒரு வலிமையான தளம் தேவைபடுகின்ற சூழ்நிலைக்கு நமது சமுதாயம் இருப்பதை உணர்ந்து, தனித்தனியே இருக்கின்ற அமைப்புகளின் சங்கங்களின், கட்சிகளின் ஒன்றுபட்ட செயலால், `இழந்ததை பெறுவோம் ஒன்று படுவோம், கூரிய வாள் கொண்டு அறுத்தாலும் பிரியோம் என்று' உலகத்திற்கு எடுத்துக்காட்டி ஓர் அணியில் நின்று நாடார் சமுதாயம் இன்று முதல் செயல்படும்.
இந்த ஒன்றுபட்ட புதிய அமைப்பிற்கு என்னை (சரத்குமார்) ஒருமனதாக தலைவராக ஏற்று வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற தேர்தலை குறுகிய காலத்திற்குள் சந்திக்க இருப்பதால் இத்தேர்தலில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியின் பெயரில் தேர்தலை சந்திப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய பொழிவுடன் கொடியிலும் மாற்றம் செய்யப்படும் என்பதும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


