எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ.1 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாராளுமன்ற பொது கணக்கு குழுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி. ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பாராளுமன்ற பொதுக் கணக்கு குழு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இந்த பொதுக் கணக்கு குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த குழுவின் கூட்டம் அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
அப்போது அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதமும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன.
இந்த குழு விசாரணைக்கு வர வேண்டும் என்று முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) ஆர்.பி. சிங்கிற்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆட்சேபணை தெரிவித்தனர்.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கைக்கு சிங் மாறுபட்ட கருத்தை கூறுவதேன் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த குழு கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் இந்த கூட்டத்தை குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஒத்திவைத்தார்.
இந்த கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது. ஆனால் வட மாநிலங்களில் சாத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்றும் இந்த கூட்டம் நடக்காது என்று கூறப்படுகிறது.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது. ஆனால் ரூ. 6,000 கோடிக்குத்தான் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிங் கூறுகிறார்.
முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) சிங் மட்டுமல்ல மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலையும் இந்த குழு முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரியுள்ளது. ஏனென்றால் இந்த ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கபில்சிபல் கூறியுள்ளார் என்றும் பா.ஜ.க. எம்.பி. பிரகாஷ் ஜவ்தேகார் கூறியுள்ளார்.
இதே போல இந்த ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து சி.பி.ஐ. இயக்குனரும் மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார். எனவே அவரையும் இந்த குழு முன்பு ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று இக்குழுவில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
2 ஜி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சஞ்சய் நிருபம் எழுதியுள்ள கடிதம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. , பிஜூ ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம், அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கடிதம் தொடர்பாக விடை காணப்படாத கேள்விகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த குழு முன்பு ஆஜராக முன்னாள் டைரக்டர் ஜெனரல் (தணிக்கை) சிங்கை அழைக்க கூடாது என்று கூறி இக்குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இதனால் இந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே இந்த குழு கூட்டத்தை ஜோஷி ஒத்திவைத்தார்.இந்த குழு கூட்டம் கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜோஷி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.