எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 9 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை- சேப்பாக்கம் ஸ்டேடியம் உட்பட இந்தியாவின் முக்கிய 8 ஸ்டேடியங்களில் சிலவற்றில் பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:-
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட 8 நகரங்களில் இந்த போட்டி நடந்து வருகிறது. இந்த 8 மைதானங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மைதானங்களில் தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்து எச்சரித்தன. லஷ்கர்இதொய்பா தீவிரவாதி ஜெய்புதீன் அன் சாரியும், அவனது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு இந்தியா வந்து நோட்டமிட்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இஸ்ரேல் உளவுத் துறையும் உலக கோப்பை கிரிக்கெட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளில் சிலர் ஊடுருவி உள்ளனர் என்று எச்சரித்தது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியம், பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம், சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 ஸ்டேடியங்களைத் தகர்க்க குறி வைத்திருப்பது தெரிய வந்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 8 ஸ்டேடியங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்படியும், உஷாராக இருக்கும்படியும் தமிழக அரசை மத்திய உள் துறை தற்போது அறிவுறுத்தி உள்ளது. இதன் முலம் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு அதிக தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற 16 மற்றும் 20-ந்தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 16-ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த ஆட்டமும் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் மிரட்டலைத் தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக இங்கு நடக்கும் போட்டிகளில் 500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீவிரவாதி அன்சாரி, இந்தியாவில் உள்ள முஜாகி தீன்களை ஸ்டேடியத்துக்குள் அனுப்பி, ரசாயண கலவைகளை சேர்த்து நாச வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் கைப்பை, குளிர்பானங்கள் எடுத்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நாட்களில் 36 மணி நேரத்துக்கு முன்பு இருந்தே ஸ்டேடியமும் அதன் நான்கு புற சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். பார்வையாளர்களை சோதித்து உள்ளே அனுப்பும் பணியில் கமாண்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 16 நுழைவாயில்களிலும் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேடியத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சோதிக்கப்படும். போட்டி தொடங்கும் முன்பு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் 4 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கார்களில் வருபவர்கள் அந்த கார் எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ள பாஸ் ஒட்டி இருந்தால்தான் பார்க் கிங் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மைதானம் முழுவதையும் தெளிவாக கண்காணிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒரு காமிரா அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரும் அமர்ந்து பார்வையாளர்களை கண்காணிப்பார். இவை தவிர அவசர தேவைக்காக மைதானத்தில் 100 அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். சந்தேகப்படும் நபர்களிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறினார். சேப்பாக்கம் அருகில் உள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை துணைக் கமிஷனர் சாரங்கன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் மயில்வாகனன், உதவிக் கமிஷனர் தமிழ்ச் செல்வன், இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.