முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிக நிறுவனங்களுக்கு சீல் அகற்ற முடியாது: ஐகோர்ட்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.4 - தி.நகரில் விதிமீறிய கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட 'சீல்' களை அகற்ற உத்தரவிடமுடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரத்னா பேன் ஹவுசிஸ் நிறுவனம் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.  தி.நகரில் விதிமீறிய கட்டிடங்களுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து சீல் வைத்தனர். இதனால் 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. பொருட்கள் கடைக்குள்ளேயே முடுங்கி உள்ளன. வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில் வியாபாரம் செய்வதற்கு வசதியாக வைக்கப்பட்ட சீல்களை அகற்ற வேண்டும் என ரத்னா பேன் ஹவுஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். மேலும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 2 வார காலத்திற்கு பின்னர் வழக்கு விசாரணைக்கு வரும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்