எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, நவ.- 9 - பெட்ரோல் விலை உயர்வை கடுமையாக எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் மம்தா பேனர்ஜி பல்டி அடித்துவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் இதுபோன்ற விலை உயர்வை அறிவித்தால் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுமாம் அந்த கட்சி. பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு வாரத்திற்கு ஒருமுறை உயர்த்தத் தொடங்கிவிட்டது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எண்ணை நிறுவனங்களுக்கே இந்த அரசு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது. மேலும் விலை நிர்ணய உரிமையையும் அந்த நிறுவனங்களுக்கே தாரைவார்த்துவிட்டது மத்திய அரசு. இதனால் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. மக்கள் வாகனங்களை வைத்துக்கொள்ளவே பயப்படுகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைத்து தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி, மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதாக மிரட்டினார். இதை அனைவரும் உண்மை என்றே நம்பினர். டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு முடிவைத் தெரிவிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது பிரதமரிடம் அவர்கள் இதுபற்றி விவாதித்தனர். தங்கள் கவலையையும் வெளிப்படுத்தினர். ஆனாலும் விலை உயர்வை திரும்பப் பெறுவது பற்றி அவர்களுக்கு பிரதமர் எந்த உறுதியும் அளிக்கவில்லையாம். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீடிப்போம் என்று கூறிவிட்டு அவர்கள் நழுவிக்கொண்டனர். இன்னொரு முறை இப்படி பெட்ரோல் விலையை உயர்த்தினால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மிரட்டியதோடு திரிணாமுல் காங்கிரஸ் தனது பணியை முடித்துக்கொண்டது. அதாவது சமீபத்திய விலை உயர்வை அந்த கட்சி ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுகுறித்து பிரதமரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சுதிப் பந்தோபாத்தியாயா நிருபர்களிடம் கூறுகையில், பிரதமரிடம் எங்கள் உணர்வுகளை தெரிவித்தோம். கொல்கத்தாவில் நடந்த எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவரிடம் கொடுத்தோம் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மீண்டும் இப்படியெல்லாம் முடிவெடுத்தால் அதாவது விலையை உயர்த்தினால் அதை சுலபமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார். விலைக் குறைப்பு பற்றி பிரதமர் ஏதேனும் உறுதியளித்தாரா? என்று கேட்டபோது, அதற்கு பாதகமாக பதிலளித்தார் பந்தோபாத்தியாயா. முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டால் நாங்கள் அரசில் இருக்க மாட்டோம், விலகிவிடுவோம் என்று அவர் கூறினாராம். ஆக இப்போதைக்கு அவர் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டார். இதனால் மத்திய அரசு கவிழ்வதில் இருந்து தப்பிவிட்டது. மம்தா பேனர்ஜி என்றாலே பல்டிதானோ...?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து
20 Jul 2025டெஹ்ரான் : ஈரானில் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
20 Jul 2025வாஷிங்டன் : வாஷிங்டனில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
-
நடு வானில் என்ஜினில் தீ: அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்
20 Jul 2025வாஷிங்டன் : நடுவானில் விமான என்ஜினில் தீப்பிடித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
தெலுங்கானா முதலமைச்சரை நேரில் சந்தித்த துல்கர் சல்மான்
20 Jul 2025ஐதராபாத் : மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
-
மீண்டும் வருகிறது: சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடருக்கு ஐ.சி.சி. அனுமதி..?
20 Jul 2025சென்னை : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் பணியை தொடங்கியது சீனா : இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம்
20 Jul 2025பெய்ஜிங் : பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை சீனா தொடங்கி உள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பம் : 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்
20 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்து தொடரில் 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க.
-
50 பணய கைதிகளை விடுவிக்க கோரி இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டம்
20 Jul 2025டெல் அவிவ் : 50 பணய கைதிகளை உயிருடனோ அல்லது அவர்களின் உடல்களையோ திரும்ப கொண்டு வரவேண்டும் என்று இஸ்ரேலில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்: ஸ்டீவ் ஹார்மிசன்
20 Jul 2025லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்டில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ள
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து
20 Jul 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.
-
மு.க.முத்து மறைவு: முதல்வரை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
20 Jul 2025சென்னை : மு.க. முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் கூறினார்