தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, நவ.- 9 - பெட்ரோல் விலை உயர்வை கடுமையாக எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் மம்தா பேனர்ஜி பல்டி அடித்துவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் இதுபோன்ற விலை உயர்வை அறிவித்தால் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுமாம் அந்த கட்சி. பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு வாரத்திற்கு ஒருமுறை உயர்த்தத் தொடங்கிவிட்டது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எண்ணை நிறுவனங்களுக்கே இந்த அரசு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது. மேலும் விலை நிர்ணய உரிமையையும் அந்த நிறுவனங்களுக்கே தாரைவார்த்துவிட்டது மத்திய அரசு. இதனால் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. மக்கள் வாகனங்களை வைத்துக்கொள்ளவே பயப்படுகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைத்து தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி, மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதாக மிரட்டினார். இதை அனைவரும் உண்மை என்றே நம்பினர். டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு முடிவைத் தெரிவிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது பிரதமரிடம் அவர்கள் இதுபற்றி விவாதித்தனர். தங்கள் கவலையையும் வெளிப்படுத்தினர். ஆனாலும் விலை உயர்வை திரும்பப் பெறுவது பற்றி அவர்களுக்கு பிரதமர் எந்த உறுதியும் அளிக்கவில்லையாம். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீடிப்போம் என்று கூறிவிட்டு அவர்கள் நழுவிக்கொண்டனர். இன்னொரு முறை இப்படி பெட்ரோல் விலையை உயர்த்தினால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மிரட்டியதோடு திரிணாமுல் காங்கிரஸ் தனது பணியை முடித்துக்கொண்டது. அதாவது சமீபத்திய விலை உயர்வை அந்த கட்சி ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுகுறித்து பிரதமரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சுதிப் பந்தோபாத்தியாயா நிருபர்களிடம் கூறுகையில், பிரதமரிடம் எங்கள் உணர்வுகளை தெரிவித்தோம். கொல்கத்தாவில் நடந்த எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவரிடம் கொடுத்தோம் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மீண்டும் இப்படியெல்லாம் முடிவெடுத்தால் அதாவது விலையை உயர்த்தினால் அதை சுலபமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார். விலைக் குறைப்பு பற்றி பிரதமர் ஏதேனும் உறுதியளித்தாரா? என்று கேட்டபோது, அதற்கு பாதகமாக பதிலளித்தார் பந்தோபாத்தியாயா. முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டால் நாங்கள் அரசில் இருக்க மாட்டோம், விலகிவிடுவோம் என்று அவர் கூறினாராம். ஆக இப்போதைக்கு அவர் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டார். இதனால் மத்திய அரசு கவிழ்வதில் இருந்து தப்பிவிட்டது. மம்தா பேனர்ஜி என்றாலே பல்டிதானோ...?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 2 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 5 days 13 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 30-06-2022.
30 Jun 2022 -
ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் யஷ்வந்த் சின்கா
30 Jun 2022சென்னை: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.
-
நேட்டோ படைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது: சுவீடன், பின்லாந்துக்கு புடின் எச்சரிக்கை
30 Jun 2022நேட்டோ படைகள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புக்கு சுவீடன் மற்றும் பின்லாந்து அனுமதி வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்
-
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் கேப்டனாக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமனம்
30 Jun 2022பர்மிங்காம்: இந்தியா -இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்குகிறார்.
-
ஒருங்கிணைப்பாளர் உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி கடிதம்
30 Jun 2022ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ.
-
பனப்பாக்கத்தில் ரூ. 400 கோடியில் மெகா காலணி உற்பத்தி பூங்கா: இராணிப்பேட்டை விழாவில் முதல்வர் அறிவிப்பு
30 Jun 2022அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று இராணிப்பேட்
-
பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு
30 Jun 2022பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.
-
அ.தி.மு.க.வின் பொருளாளர் யார் என்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி
30 Jun 2022கிருஷ்ணகிரி: அ.தி.மு.க.வின் பொருளாளர் யார் என்பது பற்றி பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
-
ஏமனில் பாதுகாப்பு படையினர் மீது கார் குண்டு தாக்குதல்: 6 பேர் பலி
30 Jun 2022ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து நடத்திய தாக்குதலில் வீரர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள்.
-
ஆஸ்கரில் சேர முதன்முறையாக தமிழ் நடிகருக்கு அழைப்பு கெத்து காட்டும் அந்த நடிகர் யார்?
30 Jun 2022தமிழ்நாட்டில்
-
பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு
30 Jun 2022ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
-
உதய்பூர் படுகொலை: தையல்காரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் முதல்வர் கெலாட்
30 Jun 2022ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் படுகொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் வீட்டிற்குச் சென்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறின
-
அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பெரியபாளையம், பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு பெரியபாளையம்,
30 Jun 2022பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.
-
கழிவு நீரகற்று பணியின் போது விபத்து: ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
30 Jun 2022மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரின் குடும்
-
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
30 Jun 2022அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 10-ம் தேதி வரை நீட்டிக்க
-
அரசினர் குழந்தைகள் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு: பணியில் இல்லாத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
30 Jun 2022இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், முதல்வர் மு.க.
-
பாலியல் பலாத்கார வழக்கில் பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை
30 Jun 2022பிரபல பாடல்களை பாடிய பாப் பாடகர் ஆர்.கெல்லி, பல பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: பிரபல வீரர் ஆன்டி முர்ரே தோல்வி
30 Jun 2022லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஆன்டி முர்ரே 2-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
2-வது சுற்றில்...
-
குறு, சிறு தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு உலகளாவிய டெண்டர் எடுக்க மாட்டோம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
30 Jun 2022புதுடெல்லி: நாட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை ஊக்குவிக்க ரூ.200 கோடி வரையிலான ஆர்டர்களுக்கு
-
புதிய டிவி ஷோவில் பங்கு பெறும் பிக்பாஸ் புகழ் நடிகை
30 Jun 2022பிக் பாஸில்
-
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கூடுதல் மனு தாக்கல்
30 Jun 2022சென்னை: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் பதிலளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் க்கு சென்னை கோர்ட்டு நோட்டீஸ் அன
-
டாஸ்மாக் போன்று வருமானம் கிடைத்தால் வனத்துறை மீதும் அக்கறை செலுத்துவீர்களா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2022சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை செலுத்துவீர்களா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஆஸ்கருக்கு நன்றி சொன்ன சூர்யாவின் போஸ்ட் நெட்டில் வைரல்
30 Jun 2022ஆஸ்கர் கமிட
-
அரசு பள்ளிகளில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது ஐகோர்ட் மதுரை கிளை கருத்து
30 Jun 2022சென்னை: தமிழகத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், அது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பண
-
3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி - 53 ராக்கெட் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிறுத்தம்
30 Jun 2022ஸ்ரீஹரிகோட்டா: டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.