எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் நவ.14குமாரபாளையத்தில் உள்ள கல்வி அறக்கட்டளையில் ரூ.20 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜே.கே.கே.நடராஜா தொழில் அதிபர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உறவினர் மகள் செந்தாமரை என்பவரை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து வளர்த்தனர். தொழில் அதிபர் நடராஜா 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையை தொடங்கினார். அதன் மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையை தனக்கு பிறகு தனது மனைவி தனலட்சுமி நிர்வகிக்க வேண்டும் என்று நடராஜா பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 1995 ஆம் ஆண்டு நடராஜா இறந்துவிட்டார். அதன்பிறகு அறக்கட்டளையின் வாரிசு நான் தான் என்று செந்தாமரை அறிவித்தார். இதனால் நடராஜாவின் மனைவி தனலட்சுமிக்கும், வளர்ப்பு மகள் செந்தாமரைக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் உதவியோடு செந்தாமரை இந்த அறக்கட்டளையை தன்வசமாக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் தனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் அமைச்சராகவும் இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.நானும் எனது கணவரும் கூட்டாக சேர்ந்து 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் தொடங்கினோம். அதன் மூலம் பல பள்ளி,கல்லூரிகளை நடத்தி வந்தோம்.கடந்த 1995 ல் எங்கள் வளர்ப்பு மகள் செந்தாமரையும், அவரது கணவர் கிருஷ்ணராஜூவும் போலி ஆவணம் மூலம் எங்களது சொத்துக்களை அபகரித்து கொண்டனர். அதற்கு தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது பினாமி பழனி முருகன்,குமாரபாளையம் மாணிக்கம்,ஈரோடு வக்கீல் பழனிசாமி ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு என் கணவர் மற்றும் என் கையெழுதையும் போலியாக போட்டுள்ளனர். என் கணவரையும் கொலை செய்து என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் புகார் அளித்தேன். அவர்கள் விசாரணை செய்து தடயவியல் நிபுணர் அறிக்கை பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,அவரது பினாமி பழனி முருகன்,ஈரோடு வக்கீல் பழனிசாமி,குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோருடன் சேர்ந்து செந்தாமரை, அவரது கணவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் டிரஸ்ட் சொத்து, அரசு உதவி பெறும் கல்லூரி, பள்ளி நிலம், கட்டிடம் உள்பட அசையும் சொத்துக்கள், அனைத்தையும் கல்வித்துறை அனுமதியின்றி ஈரோடு இந்தியன் வங்கியில் அடமான வைத்து ரூ.20 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர்.
அதன் மூலம் சாத்தூர் ராமச்சந்திரன் பினாமி பழனிமுருகன் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.செந்தாமரை உள்ளிட்டோர் எங்களை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றாவிட்டனர். எனவே சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஜே.கே.ஜே.நடராஜாவின் வளர்ப்பு மகளும்,ஜே.கே.ஜே.நடராஜா கல்வி நிறுவனங்களின் சேர்மேனுமான செந்தாமரை,அவரது கணவர் கிருஷ்ணராஜ்,பழனிமுருகன், வக்கீல் பழனிசாமி,தி.மு.க.பிரமுகர் மாணிக்கம் உள்ளிட்ட 6 பேர் மீது சதி செய்தல்,நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல்,மோசடி செய்தல்,ஆள்கடத்தல், போலி ஆவணம் தயார் செய்தல், போலி ஆவணம் தாக்கல் செய்தல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.