எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாமக்கல் நவ.14குமாரபாளையத்தில் உள்ள கல்வி அறக்கட்டளையில் ரூ.20 கோடி மோசடி நடந்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜே.கே.கே.நடராஜா தொழில் அதிபர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உறவினர் மகள் செந்தாமரை என்பவரை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து வளர்த்தனர். தொழில் அதிபர் நடராஜா 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையை தொடங்கினார். அதன் மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையை தனக்கு பிறகு தனது மனைவி தனலட்சுமி நிர்வகிக்க வேண்டும் என்று நடராஜா பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 1995 ஆம் ஆண்டு நடராஜா இறந்துவிட்டார். அதன்பிறகு அறக்கட்டளையின் வாரிசு நான் தான் என்று செந்தாமரை அறிவித்தார். இதனால் நடராஜாவின் மனைவி தனலட்சுமிக்கும், வளர்ப்பு மகள் செந்தாமரைக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. முன்னாள் தி.மு.க.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் உதவியோடு செந்தாமரை இந்த அறக்கட்டளையை தன்வசமாக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் தனலட்சுமி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் அமைச்சராகவும் இருந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.நானும் எனது கணவரும் கூட்டாக சேர்ந்து 1969 ல் ஜே.கே.கே.ரங்கம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் தொடங்கினோம். அதன் மூலம் பல பள்ளி,கல்லூரிகளை நடத்தி வந்தோம்.கடந்த 1995 ல் எங்கள் வளர்ப்பு மகள் செந்தாமரையும், அவரது கணவர் கிருஷ்ணராஜூவும் போலி ஆவணம் மூலம் எங்களது சொத்துக்களை அபகரித்து கொண்டனர். அதற்கு தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது பினாமி பழனி முருகன்,குமாரபாளையம் மாணிக்கம்,ஈரோடு வக்கீல் பழனிசாமி ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு என் கணவர் மற்றும் என் கையெழுதையும் போலியாக போட்டுள்ளனர். என் கணவரையும் கொலை செய்து என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.போலீசாரிடம் புகார் அளித்தேன். அவர்கள் விசாரணை செய்து தடயவியல் நிபுணர் அறிக்கை பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,அவரது பினாமி பழனி முருகன்,ஈரோடு வக்கீல் பழனிசாமி,குமாரபாளையத்தைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோருடன் சேர்ந்து செந்தாமரை, அவரது கணவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் டிரஸ்ட் சொத்து, அரசு உதவி பெறும் கல்லூரி, பள்ளி நிலம், கட்டிடம் உள்பட அசையும் சொத்துக்கள், அனைத்தையும் கல்வித்துறை அனுமதியின்றி ஈரோடு இந்தியன் வங்கியில் அடமான வைத்து ரூ.20 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர்.
அதன் மூலம் சாத்தூர் ராமச்சந்திரன் பினாமி பழனிமுருகன் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.செந்தாமரை உள்ளிட்டோர் எங்களை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றாவிட்டனர். எனவே சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.மு.க.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ஜே.கே.ஜே.நடராஜாவின் வளர்ப்பு மகளும்,ஜே.கே.ஜே.நடராஜா கல்வி நிறுவனங்களின் சேர்மேனுமான செந்தாமரை,அவரது கணவர் கிருஷ்ணராஜ்,பழனிமுருகன், வக்கீல் பழனிசாமி,தி.மு.க.பிரமுகர் மாணிக்கம் உள்ளிட்ட 6 பேர் மீது சதி செய்தல்,நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல்,மோசடி செய்தல்,ஆள்கடத்தல், போலி ஆவணம் தயார் செய்தல், போலி ஆவணம் தாக்கல் செய்தல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
நாமக்கல், கரூரில் நாளை 3-ம் கட்ட விஜய் பிரசாரம்
25 Sep 2025கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
-
லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
25 Sep 2025புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
25 Sep 2025கோவை, அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்
25 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
நீலகிரி, கோவை 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
25 Sep 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அலுவலர் கைது
25 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவரை போலீசார் கைது செய்தனர்.
-
முதல்முறையாக ரயில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
25 Sep 2025புதுடெல்லி, நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டம்
25 Sep 2025சென்னை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு 24,607 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் பலி
25 Sep 2025ராமநாதபுரம், தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு: லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: உள்துறை அமைச்சகம்
25 Sep 2025லடாக், லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
சி.வி.சண்முகத்துடன் சந்திப்பு ஏன்? பா.ஜ.க. மாநில தலைவர் விளக்கம்
25 Sep 2025விழுப்புரம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜி.கே.மணியின் பதவி பறிப்பு: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவரானார் வெங்கடேஸ்வரன்
25 Sep 2025சென்னை, பா.ம.க. சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனமா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
25 Sep 2025மதுரை, குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் நடக்கிறதா என்று மதுரை ஐகோர்டடு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
இலங்கையில் கேபிள் கார் விபத்து: ஏழு புத்த மத துறவிகள் உயிரிழப்பு
25 Sep 2025கொழும்பு, இலங்கையில் கேபிள் கார் விபத்தில் புத்த மத துறவிகள் 7 பேர் உயிரிழநதுள்ளனர்.
-
கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
25 Sep 2025சென்னை, நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்
-
தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து
25 Sep 2025சென்னை: தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
25 Sep 2025புதுடெல்லி: மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் நிலநடுக்கம்
25 Sep 2025காரகாஸ், 6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காகிதப்புலி அல்ல... நாங்கள் கரடி: அதிபர் ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி
25 Sep 2025செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவை விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரஷ்யா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
25 Sep 2025சென்னை: சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்டம்: 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தனர்
25 Sep 2025சென்னை: ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர்
-
இந்தியாவுடன் பிரச்சனை இருக்கிறது: வங்கதேச இடைக்கால அரசு தலைவர்
25 Sep 2025டாக்கா: இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
-
டிக் டாக் தடை நீக்கமா? ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் ட்ரம்ப்
25 Sep 2025வாஷிங்டன்: டிக்டாக் தடையை நீக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் கையேழுத்திட முடிவு செய்தார்.
-
எச் - 1பி விசா கட்டண விவகாரம்: திறமை வாய்ந்த இந்தியர்களை ஈர்க்க தீவிரம் காட்டும் ஜெர்மனி, பிரிட்டன்..!
25 Sep 2025லண்டன்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி பிரிட்டன் தீவிரம் காட்டியுள்ளது.