எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.15 - மூதாட்டிகள் கொல்லப்படுவதை தடுக்கவும், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நேற்று நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். சென்னையில் நேற்று நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த மாநாட்டில் உரையாற்றுவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது உங்களுக்கும், எனக்கும் இடையிலான ஒரு கலந்துரையாடல் ஆகும். முந்தைய என்னுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் என்னுடைய செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள்.
காவல் துறையின் பெரும்பாலான அதிகாரிகள் குறித்து நான் நன்கறிவேன். இதற்கு முன்னர் நாம் இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பு அளித்தது போலவே தொடர்ந்து செயல்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
காவல்படை என்பது மாநிலத்தினுடைய அதிகாரத்தின் கண்கூடாகத் தெரிகிற ஓர் அடையாளம் ஆகும். காவல்துறையின் மீது பாமர மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதை உறுதிசெய்வது நமது அனைவரின் ஒருமித்த முயற்சியாகும்.
நம் மாநில மக்களுக்கு, பாதுகாப்பான அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தருவது முதன்மையான முயற்சியாகும். பெரும்பாலன இல்லங்களில் மீண்டும் அமைதி திரும்பும் வகையில், நில அபகரிப்புப் புகார்களுக்கு எதிரான ஒப்பற்ற உங்களுடைய செயல்பாட்டை நான் பாராட்டியே ஆக வேண்டும். இதுவரை ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சினை தொடர்புடைய சம்பவங்கள் மிகத் திறமையாகக் கையாளப்பட்டுள்ளன. எல்.கே.அத்வானி பயணத்தின்போது திருமங்கலம் அருகே வைக்கப்பட்டிருந்த நவீன குழாய் வெடிகுண்டுகளை தக்க நேரத்தில் கண்டறிந்ததன் மூலம் பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது குறித்து எனக்கு ஏற்பட்ட நிம்மதியை உங்களுக்குத் தெரிவித்தாக வேண்டும்.
பின்வருவன குறித்து உங்களுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று விழைகிறேன்.
கடுமையான கிரிமினல்களும், ரவுடிகளும் இன்னும் பெருமளவில் இருந்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தலை நாம் தடுத்தாக வேண்டும்.
உயிருக்கும், உடைமைகளுக்கும் பேராபத்து மீண்டும் மீண்டும் தழைத்து வருவதை அடியோடு ஒடுக்கவும் ஒழிக்கவும் வேண்டும். வயதான பெண்களை கொலை செய்வது, குழந்தைகளை கடத்திச் செல்வது முதலிய சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். மகளிர் தொடர்பான குற்றங்கள் அறவே இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
சங்கலி பறிப்பு, வணிக நிறுவனங்களை உடைத்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள், ஏனைய துணிகர கொள்ளைச் சம்பவங்கள், சென்னை மாநகரில் பெருமளவில் நடைபெறுகின்றன. பேராசையின் காரணமாக இத்தகைய சம்பவங்கள் சமுதாயத்தின் ஒரு பக்கத்தில் நடைபெற்று வருகிறபோது காவல்துறையின் உறுதியான, திறமையான விழிப்புப் பணியுடன் கூடிய, திறம்பட்ட நடவடிக்கை மூலம் இத்தகைய செயல்களைத் தடுப்பது காவல்துறையின் கடமையாகும்.
சாலை விபத்துகளின்போது ஏற்படுகின்ற பெரும்பாலான மரணம் குறித்து நான் ஆழ்ந்த வருத்தமடைகிறேன். இத்தகைய மிகப்பெரிய உயிரிழப்பின் காரணமாக, விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏற்படுகிற பெருந்துயரம் உடனடியாகத் தணிக்கப்படவேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், கவனக்குறைவாக வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பது தவிர்க்க இயலாததாகும்.
கள்ளச்சாராயமும், போலி மது விநியோகமும் குறைந்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உளவுத்துறைத் தகவல்களைச் சேகரித்தல், திடீர் சோதனை நடத்துதல், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் உள்ளூர் காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, வருவாய்த்துறையினர் ஆகியோருக்கிடையே பெரிதும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது அவசியமாகும்.
காவல்துறையினரின் நவீனமான நடைமுறைகளைக் காட்டிலும் மிகவும் நுட்பமான முறையில் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். அத்தகைய குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு, காவல்துறையினருக்கு, தொடர்ச்சியான நவீன பயிற்சியும், நுண்ணறிவும் தேவைப்படுகிறது. இதை நிறைவேற்றும் வகையில் காவல் துறையினருக்குப் பயிற்சியும், புத்தாக்கப்பயிற்சியும் அளிப்பதற்கு ஒருமித்த முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் அவசியமாகும்.
சமுதாயத்திற்கு எதிராக ஏற்படுகின்ற வன்முறைச்செயல்களைக் கண்டறிந்து, குற்றங்களை, திறன்பட்ட முறையில் தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கை செவ்விய முறையில் பராமரிப்பதில் உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை நல்குவீர்கள் என்று நான் நம்புகிறேன். எனக்காகவும், நமது மாநிலத்திற்காகவும் நான் வகுத்துள்ள நோக்கங்களுடன் உங்களுடைய நோக்கங்கள் ஒத்திசைவாக இருக்குமென்று நான் நம்புகிறேன். சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் மற்றும் தொடர்புடைய காவல்பணியிலும் முதலிடத்தை அடைவதற்காக, மாநிலஅரசிற்கு உதவி செய்வதில், தமிழ்நாடு காவல்துறை தனித்தன்மை பெற்றுள்ளதாக நம்புகிறேன்.
காவல்துறையினருக்கான நலத்திட்டங்களுக்கு, நான் ஒருபோதும் கட்டுப்பாடு விதித்ததில்லை. நான் உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்க தயாராக இருக்கிறேன். கணினி வழிக்குற்றங்கள் முதற்கொண்டு, நாகரீகமான போர்வையில் செய்யப்படுகின்ற குற்றங்கள் வரையில் சட்டத்திற்கு புறம்பான பிற நடவடிக்கைகள் உட்பட பல பிரச்சனைகள் நம்முன் உள்ளன.
அரசின் முன்னுரிமைத்திட்டங்களுக்கு நாம் அனைவருமே பொறுப்பாவோம். உங்களுடைய பணிக்காலத்தில் சிறந்தவற்றையே செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதுடன், உங்களுடைய பணிகளை செம்மையான முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விழைகிறேன்.காலத்தின் அருமை கருதி என் உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு