முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் கிரிக்கெட்தொடர் இந்தியா - மே.இ.தீவு அணிகள் கட்டாக்கில் இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கட்டாக், நவ. - 29  - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக் நகரில் இன்று துவங்குகிறது. இந்தப் போட்டித் தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா?  கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  முன்னதாக இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெ ஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் தொ டரை கைப்பற்றி சாதனை படைத்தது.  இந்நிலையில், இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் போட்டி ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.  முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.  அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் இருவருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக் கப்பட்டுள்ளது. எனவே ஒரு நாள் தொடருக்கு சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.  தற்போதைய நிலையில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பெளலி ங் இரண்டும் பலமாக உள்ளது. எனவே ஒரு நாள் தொடரிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுத் தருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.  முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்ததால் மேற்கு இந்தியத் தீவு கள் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். எனவே இந்த த் தொடரிலும் கடும் சவால் நிறைந்திருக்கும். 

சேவாக் இதுவரை 7 ஒரு நாள் போட்டிக்கு தலைமை தாங்கி இருக்கி றார். இதில் 4 போட்டியில் வெற்றி கிடைத்தது. 3 ஆட்டத்தில் தோல் வி ஏற்பட்டது. அவர் ரகானேவுடன் இணைந்து ஆட்டத்தை துவக்கு வார். காம்பீர் 3 -வது வீரராக களம் இறங்குவார். 

மிடில் ஆர்டரில் விராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா உள்ளனர். பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். 

இந்திய அணியில் பிரவீன் குமார், வினய் குமார், உமே ஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர். இதில் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி னார். அஸ்வின் சுழற் பந்து வீச்சில் கலக்கினார். அதே போல ஒரு நாள் தொடரிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன முதல் ஒரு நாள் போட்டி ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷ  ன் மற்றும் நியோ சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இந்திய அணி : - சேவாக் (கேப்டன்), ரகானே, காம்பீர், கோக்லி, ரெ ய்னா, ரவீந்திர ஜடேஜா, பார்த்திவ் படேல், பிரவின் குமார், உமேஷ் யாதவ், வினய் குமார், அஸ்வின், ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, வருண் ஆரோன் மற்றும் ராகுல் சர்மா ஆகியோர். 

மே.இ.தீவு அணி : - டேரன் சம்மி (கேப்டன்), அட்ரியன் பரத், லெண்டில் சிம்மன்ஸ், டிவைன் பிராவோ, சாமுவேல்ஸ், பொல்லார்டு, மார்ட்டின், பொவெல், ராம்தின், கேமர் ரோச், ரஸ்சல், டான்சா ஹயாத், ராம்பால், ஜேசன் முகமது மற்றும் சுனில் நரீன் ஆகியோர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்