எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 5 - சிம்பு நடித்த `ஒஸ்தி' படத்தை வெளியிட விடாமல் தடுக்க சதி நடக்கிறது என்று டி.ராஜேந்தர் கூறினார். இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒஸ்தி படம் வருகிற 8-ம் தேதி வெளியிட உள்ளோம். தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்கிறார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் சதி நடக்கிறது. கோவை, திருப்பூர் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் போட்டி விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்தி கட்ட பஞ்சாயத்து செய்கிறார். இவர் சங்கம் நடத்தக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தும் அதை மீறி அவர் சங்கம் நடத்துவது எப்படி? ஒஸ்தி படத்தை பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட ஒத்துழைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சிப்பேன். தடைகளையெல்லாம் தகர்த்தெறியும் தைரியசாலி முதல்வர் ஜெயலலிதா. திரையுலகிலிருந்து அரசியல் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர் நீங்கள், கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு சென்று கொடியை ஏற்றியவர் நீங்கள், அப்படியிருக்க கலையுலகத்தின் கஷ்டங்களைப் பார்த்து உங்கள் கண்கள் திறக்காமல் இருக்குமா? கதறலைதான் உங்கள் காதுகள் கேட்காமல் போகுமா? ஒரு பக்கம் சின்னத்திரைகளின் வளர்ச்சி, மறுபக்கம் திருட்டு வீடியோவால் தளர்ச்சி, இன்னொரு பக்கம் திரைப்படங்களுக்கு மாநகரங்களில் 30 சதவீதம் வரை கேளிக்கை வரி என்ற அதிர்ச்சி, கர்நாடகத்தை எடுத்துக் கொண்டால் கன்னடப் படங்களுக்கு முழு வரி விலக்கு. வாடும் எங்களுக்கு காட்டுங்கள் ஒரு வழி, பிரச்சினைகளால் பிதுங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் விழி. யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். நடித்து குறள் டி.வி. மூலம் வெளியாகவிருக்கும் ஒஸ்தி (யு தணிக்கை சான்றிதழ்) படத்துக்கும் ஏன் கிடைக்கக் கூடாது வரிவிலக்கு? உங்களிடத்தில் இந்த கோரிக்கை வைப்பதற்கு எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன் உரிமை. சன் டி.வி. படத்தை வாங்கி விநியோகம் செய்கின்ற படங்களை சில திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தடை போடுவோம் என சொன்னார்கள். அதில்கூட இருந்திருக்கலாம் நியாயம். சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கூட கொடுத்தால் கூட தடை போடுவோம் என்பதை முன்கூட்டியே முறைப்படி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அறிவிக்கவில்லை. நான் உறுப்பினராக இருக்கும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் அறிவிக்கவில்லை. வெளிப்படையாக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தவில்லை. அப்படியிருந்தும் எங்கள் ஒஸ்தி படம் தணிக்கை செய்யப்பட்டு தேதியும் நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து விளம்பரம் செய்த நிலையில் இப்போது தடை என்றால் ஒரு தயாரிப்பாளரின் நிலையையும், ஒரு விநியோகஸ்தரின் கதியையும் எண்ணிப் பாருங்கள்.
திரைப்பட உரிமையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் பாக்கி என்றால் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்படி காவல் துறையிடம்கூட முறையிட்டு சிலர் பலன் பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்க, இனிமேல் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை கொடுக்கும் படங்களுக்கு எதிர்காலத்தில் தடை போடுவோம் என்று சொல்லுங்கள். இப்பொழுது இந்தப் படத்துக்கு நிதி உதவியளித்த ரிலையன்ஸ் நிறுவனம் சன் டி.வி.க்கு டி.வி. உரிமையை விற்றிருக்கிறது. திரையரங்க உரிமையாளரோடு சன் டி.வி.க்கு பிரச்சினை என்றவுடன் சன் டி.வி.யை தீர்வு காணுங்கள். இல்லையேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடும் என்றுகூட அறிவித்திருக்கிறது. அதுவும்கூட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அதையும் மீறி சன் டி.வி.யோடு திரையரங்க உரிமையாளர் சங்கம் போட்டுக் கொண்டிருக்கிறது குஸ்தி. அதில் இடையில் மாட்டி சிக்கித் தவிக்கலாமா ஒஸ்தி?
விளம்பர செலவோடு சேர்த்து பல கோடிகளுக்கும் மேல் விலை கொடுத்து வாங்கியிருக்கும் குறள் டி.வி.யின் நிலை என்ன? இந்த நாட்டிலே தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. விநியோகஸ்தர் சங்கம் இருக்கிறது. திரைப்பட உரிமையாளர் சங்கம் இருக்கிறது. பத்தும் பத்தாததற்கு போட்டி சங்கங்களும் இருக்கிறது. எல்லாம் இருந்தும் நாங்கள் எங்கே போய் கேட்க முடியும் நியாயம்? இத்தனை கோடி செலவு செய்த தயாரிப்பாளரும், பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கிய விநியோகஸ்தருமாகிய நாங்கள்தான் பட்டிருக்கிறோம் காயம்.
உலகிலேயே ஒசத்தி ஒரே சக்தி அது ஓம் சக்தி. வெளியிடுவதற்கு அவர் தருகிறார் யுக்தி. அந்த ஆண்டவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட வேண்டும். இந்த படம் வெளியாகவிருக்கும் எட்டாம் தேதி திருவண்ணாமலை தீபம். அந்த அண்ணாமலையாரின் அருள் இருக்கும் வரை ஒஸ்திக்கு கிடைக்கும் உச்ச லாபம். இது ஒரு ஆன்மீகவாதியாகிய என்னுடைய நம்பிக்கை.
ஆண்டவன் தான் திறக்க வேண்டும் நடை, முதல்வர் ஜெயலலிதாதான் சொல்ல வேண்டும் நல்ல விடை, அதையும் மீறி யார் போடுவார்கள் தடை.
இவ்வாறு டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி