எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில்,டிச.16 - நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாநில தணிக்கு குழு உறுப்பினர் கோட்டார் கோபால் இல்ல திருமணவிழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற குமரி மாவட்ட மதிமுகவினருக்கு பாராட்டுவிழா ஆகியவை நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு பல தலைவர்கள் போராடி இணைத்தனர். இது போன்று பல பகுதிகளை இணைத்த போது தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளா வசம் சென்றது. முல்லை பெரியாறு அணையால் எந்த பாதிப்பும் இல்லை. பூகம்பம் வந்தாலும் இடியாது. கேரள சகோதரர்களே, நாங்கள் உங்களை பகைவர்களாக நினைக்கவில்லை. உங்களுக்கு துன்பம் விளைவித்து நாங்கள் இன்பம் காண விரும்பவில்லை. கேரள மக்கள் 35 லட்சம் பேரை சாகடித்து விட்டு நாங்கள் சாகுபடி செய்ய விரும்பவில்லை. தமிழகத்தின் நிதி பங்களிப்பில் கட்டப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாயில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கேரள அரசு மீறிவிட்டது. நெய்யாறு இடதுகரை சானலில் கேரள அரசு தண்ணீர் தரவில்லை. அரபிக்கடலில் வீணாகும் தண்ணீர் குமரி மாவட்டத்திற்குள் வரட்டும் என்ற எண்ணம் கேரள அரசுக்கு இருக்கறதா? நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி அணை பிரச்சனையில் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் இழந்துவிட்டது. தற்போது 5 மாவட்டங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனையால் கேள்விக்குறியாக உள்ளது. கேரள அரசு இடுக்கி அணையை கட்டியது. ஆனால் அவர்கள் நினைத்த அளவிற்கு அணைக்கு நீர்வரத்து இல்லை. இந்த அணை விவசாயத்துக்கு கட்டப்பட்டது அல்ல. மின்சாரத்திற்காக கட்டப்பட்ட அணை. அந்த அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் முல்லை பெரியாறு அணையை இடித்து தில் உள்ள 30டிஎம்சி தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்லலாம் என அவர்கள் திட்டம் போட்டு அணையை இடிக்க ரூ.40 கோடி ஒதுக்கி உள்ளனர். அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழக அரசு அணையில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு கேட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக நான் பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொல்ல நீங்கள் ஆயுதங்கள் கொடுத்தீர்கள். அந்த காயம் ஆறுவதற்குள்ளே முல்லை பெரியாறு அணை உடைவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அணையை உடைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு உடைவதற்கான தொடக்க நாளாக இருக்கும் என கூறினேன். இவ்வாறு நான் கூறியதற்காக என் மீது ராஜதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
இந்திய ஒருமைப்பாட்டை காக்க உச்சநீதிமன்றம் முனையும் என்று நம்புகிறேன். ஒருவேளை உச்சநீதிமன்றமும் கைவிட்டுவிட்டால் அணையை காப்பாற்ற நாம் தான் போராட வேண்டியுள்ளது. வருகிற 21ம் தேதி முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 14 வழிகளிலும் திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், மாநிலதுணை பொதுசெயலாளர் நாசரேத்துரை, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2026
08 Jan 2026 -
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
08 Jan 2026திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
08 Jan 2026சென்னை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.


