எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில்,டிச.16 - நாகர்கோவிலில் ம.தி.மு.க. மாநில தணிக்கு குழு உறுப்பினர் கோட்டார் கோபால் இல்ல திருமணவிழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற குமரி மாவட்ட மதிமுகவினருக்கு பாராட்டுவிழா ஆகியவை நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு பல தலைவர்கள் போராடி இணைத்தனர். இது போன்று பல பகுதிகளை இணைத்த போது தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளா வசம் சென்றது. முல்லை பெரியாறு அணையால் எந்த பாதிப்பும் இல்லை. பூகம்பம் வந்தாலும் இடியாது. கேரள சகோதரர்களே, நாங்கள் உங்களை பகைவர்களாக நினைக்கவில்லை. உங்களுக்கு துன்பம் விளைவித்து நாங்கள் இன்பம் காண விரும்பவில்லை. கேரள மக்கள் 35 லட்சம் பேரை சாகடித்து விட்டு நாங்கள் சாகுபடி செய்ய விரும்பவில்லை. தமிழகத்தின் நிதி பங்களிப்பில் கட்டப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாயில் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கேரள அரசு மீறிவிட்டது. நெய்யாறு இடதுகரை சானலில் கேரள அரசு தண்ணீர் தரவில்லை. அரபிக்கடலில் வீணாகும் தண்ணீர் குமரி மாவட்டத்திற்குள் வரட்டும் என்ற எண்ணம் கேரள அரசுக்கு இருக்கறதா? நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி அணை பிரச்சனையில் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் இழந்துவிட்டது. தற்போது 5 மாவட்டங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சனையால் கேள்விக்குறியாக உள்ளது. கேரள அரசு இடுக்கி அணையை கட்டியது. ஆனால் அவர்கள் நினைத்த அளவிற்கு அணைக்கு நீர்வரத்து இல்லை. இந்த அணை விவசாயத்துக்கு கட்டப்பட்டது அல்ல. மின்சாரத்திற்காக கட்டப்பட்ட அணை. அந்த அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் முல்லை பெரியாறு அணையை இடித்து தில் உள்ள 30டிஎம்சி தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு செல்லலாம் என அவர்கள் திட்டம் போட்டு அணையை இடிக்க ரூ.40 கோடி ஒதுக்கி உள்ளனர். அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழக அரசு அணையில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு கேட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக நான் பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொல்ல நீங்கள் ஆயுதங்கள் கொடுத்தீர்கள். அந்த காயம் ஆறுவதற்குள்ளே முல்லை பெரியாறு அணை உடைவதற்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அணையை உடைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு உடைவதற்கான தொடக்க நாளாக இருக்கும் என கூறினேன். இவ்வாறு நான் கூறியதற்காக என் மீது ராஜதுரோக வழக்கு போடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
இந்திய ஒருமைப்பாட்டை காக்க உச்சநீதிமன்றம் முனையும் என்று நம்புகிறேன். ஒருவேளை உச்சநீதிமன்றமும் கைவிட்டுவிட்டால் அணையை காப்பாற்ற நாம் தான் போராட வேண்டியுள்ளது. வருகிற 21ம் தேதி முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் 14 வழிகளிலும் திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், மாநிலதுணை பொதுசெயலாளர் நாசரேத்துரை, கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்


